முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் 10லட்சம் பக்தர்கள் கிரிவலம்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      ஆன்மிகம்

திருவண்ணாமலை, ஏப்.- 19 - திருவண்ணாமலை கோவிலில் சித்திரை முழுநிலவை முன்னிட்டு 10 லட்சம் பக்தர்கள் நேற்று கிரிவலத்தில் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உண்ணாமலையம்மன் கோவிலில் மாதம் தோறும் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் நடப்பது வழக்கம். ஆண்டுக்கொருமுறை நடக்கும் கார்த்திகை தீபத்திருவிழாவின் போது சுமார் 17 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். இதேபோல சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் வருவார்கள். நேற்று சித்ரா பவுர்ணமி நாள் என்பதால் சுமார் 10லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்கள் வசதிக்காக பால் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாநிலம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு வசதியாக ஏராளமான சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அருணாசலேஸ்வரர், உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அலங்காரங்களும் பூஜைகளும் நடந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்