எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஏப்.20 - ஐ.பி.எல். போட்டிகளில் நேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெக்கான் சார்ஜர்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற 19-வது போட்டியில் சேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சங்ககாரா தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சன்னி சோகால் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் களமிறங்கினர். சோகல் தனக்கு வீசப்பட்ட முதல் பந்தை அருமையான கவர் டிரைவ் மூலம் 4 ரன்களாக மாற்றினார். தவான் தன் பங்கிற்கு இரண்டு பவுண்டரிகளை அடித்தார். ஆனால் 8 ரன்கள் எடுத்த தவானை, இர்பான் பதான் கிளீன் போல்டு செய்து அவுட்டாக்கினார். இதையடுத்து அணியின் கேப்டன் குமார் சங்ககாரா, சோகலுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. அதிலும் சங்ககாரா சுழல் பந்துவீச்சை சூறையாடினார். குறிப்பாக நதீம் வீசிய முதல் ஓவரில் மிட் ஆன் திசையில் ஒரு சிக்சரையும், மேலும் இரண்டு பவுண்டரிகளையும் அடித்தார். சோகல் மற்றும் சங்ககாரா இருவரும் 92 ரன்களை பார்ட்னர்ஷிப்பாக பெற்றனர். அணியின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்தபோது 35 பந்துகளில் 49 ரன்களை அடித்திருந்த சங்ககாரா, டிண்டாவின் பந்தில் பின்ச்சால் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டார். இவரை அடுத்து கேமரான் ஒயிட் சோகாலுடன் ஜோடி சேர்ந்தார். அணியின் எண்ணிக்கை 129 க்கு உயர்ந்தபோது அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சோகால் நதீமின் சுழலில் பின்ச்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அவர் எடுத்த ரன்கள் 62. இது இந்த தொடரில் சோகாலின் முதல் அரை சதமாகும். ஒரு கட்டத்தில் டெக்கான் அணி 11 ஓவர்களில் 100 ரன்களை எடுத்தது. இதனால் இந்த அணி எளிதில் 200 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சங்ககாரா, சோகால் ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு டெக்கான் அணியின் ரன் எடுக்கும் வேகம் குறைந்தது. மேலும் டெல்லி அணியும் மிகச் சிறப்பாக பந்து வீசி டெக்கானின் ரன் வேகத்தை மட்டுப் படுத்தியது. இதனால் கடைசி 6 ஓவர்களில் டெக்கான் அணி 3 பவுண்டரிகளை மட்டுமே அடித்தது. டெக்கான் அணியின் நடுப்பகுதி ஆட்டக்காரர்களில் ஒயிட் மட்டும் சிறப்பாக விளையாடி 25 பந்துகளில் 31 ரன்களை எடுத்தார். இதையடுத்து 20 ஓவர்களின் முடிவில் டெக்கான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது. டெல்லி அணி சார்பாக டிண்டா, பதான், நதீம், ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
169 ரன்கள் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக வைக்கப்பட்டது. துவக்க வீரர்கள் வார்னர் மற்றும் சேவாக் அதிரடியாக ஆட்டத்தை துவக்கினர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் வகையில் 4 வது ஓவரில் சேவாக் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மீத்சிங்கின் பந்துவீச்சில் கிறிஸ்டியானால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து ஓஜா களமிறங்கினார். இவரும் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அணியின் எண்ணிக்கை 33 ஆக இருந்தபோது 2 ரன்களே எடுத்திருந்த ஓஜா, கிறிஸ்டியானின் பந்தில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பின்ச் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஹர்மீத்சிங்கின் பந்தில் சங்ககாராவால் பிடிக்கப்பட்டு அவுட்டானார். 38 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாற ஆரம்பித்தது. இந்த நேரத்தில் வேணுகோபால்ராவ், துவக்க வீரர் வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் ஓரளவு ரன் எண்ணிக்கையை உயர்த்தி நம்பிக்கை அளித்தனர். இந்த ஜோடியால் அணி ஓரளவு கெளரவமான ஸ்கோரை எட்டியது. ஆனால் அடிக்க வேண்டிய ரன் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்ததால் அடித்து ஆடவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் அமித் மிஸ்ராவின் ஓவரில் ஒரு அழகான சிக்ஸரை அடித்த வேணுகோபால் அந்த ஓவரில் அதேபோல் சிக்ஸர் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் எடுத்த ரன்கள் 21. அடுத்து நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி அரை சதம் அடித்த வார்னர், தவானின் பந்துவீச்சில் ரவிதேஜாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 14.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களாக இருந்தது. அடுத்து வந்த இர்பான் பதான் 5 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, நாகர், ஹோப்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சில அதிரடியான ஷாட்களை அடித்தாலும் அது டெல்லி அணியை வெற்றி பெறச் செய்ய போதுமானதாக இல்லை. இந்நிலையில் அதிரடியாக 11 பந்துகளில் 23 ரன்களை அடித்திருந்த நாகர், கிறிஸ்டியானின் பந்தில் கிளீன் போல்டானார். இறுதியில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆட்டமிழக்காமல் ஹோப்ஸ் 17 ரன்களையும், மோர்கல் 8 ரன்களையும் எடுத்திருந்தனர். டெக்கான் அணி தரப்பில் கிறிஸ்டியான், ஹர்மீத்சிங் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஓஜா, மிஸ்ரா, தவான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தியது டெக்கான் சார்ஜர்ஸ். டெக்கான் அணியின் சன்னி சோகால் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.