முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்தணி ஒன்றியத்தில் இன்று அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.22 - திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை வெளியேற்றத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற திருத்தணி நகராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (22.2.2011 ​ செவ்வாய்க் கிழமை) நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்தமாக விளை நிலங்கள் எல்லாம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, மிகப் பெரிய வணிக நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதும், அங்குள்ள மக்கள் விரட்டியடிக்கப்படுவதும்  ஆங்காங்கே பெருமளவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம்,  சீனிவாசபுரம், முஸ்லீம் நகர் மற்றும் அருந்ததிபாளையம் கிராமங்களுக்கு உட்பட்ட 160 ஏக்கர் நிலத்தை, 1 கோடியே 76 லட்சம் ரூபாய்க்கு, சென்னை, கோபாலபுரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு விற்க விற்பனைப் பத்திரம் தயார் செய்யப்பட்டு, திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் 28.10.2010 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்தவர்கள் மேற்படி கிராமங்களுக்குச் சென்று அங்கு காலம் காலமாக தங்களுடைய பட்டா நிலத்தில் வசித்து வந்த மக்களை வெளியேறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகிய போது, எங்களுக்கு பத்திரப் பதிவு முக்கியம்.  பட்டாவின் நம்பகத்தன்மை, நிலம் யாருக்குச் சொந்தம் என்ற விசாரணையில் ஈடுபட முடியாது என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.  ஆனால், பதிவுத் துறைத் தலைவரோ, சீனிவாசபுரம், முஸ்லீம் நகர் மற்றும் அருந்ததிபாளையத்தில் 160 ஏக்கர் நிலம் குறித்து விற்பனை ஆவணம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார்.  இது முழுப் nullசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக அமைந்துள்ளது. 

மேற்படி விற்பனையின் மூலம் 1,200 குடும்பங்களைச் சேர்ந்த 5000​க்கும் மேற்பட்ட ஏழை, எளிய கிராம மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, மேற்படி பிரச்சினை குறித்து விவாதிக்க கட்சியின் சார்பில் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டும், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது குறித்து முதலமைச்சர் முதல் தாசில்தார் வரை அனைவருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்து மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீnullர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், துப்புறவுப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலவிதமான நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாக்கப்பட்டு உள்ளதாகவும், நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், திருத்தணி நகருக்குள் உள்ளூர் பேருந்து நிலையமும், நகருக்கு வெளியே வெளியூர் பேருந்து நிலையமும் அமைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும், திருத்தணி நகருக்கு உள்ளே வரும் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தை இடித்துவிட்டு வேறு பாலம் அமைக்க மைனாரிட்டி தி.மு.க. அரசு முடிவு எடுத்துள்ளதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும், நெசவாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை தரப்படுவதில்லை என்றும், வீட்டு வரி விதிப்பில் ஒழுங்கான நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன. 

எனவே, திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை வெளியேற்றத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற, திருத்தணி நகராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட மூன்று கிராமங்கள் விற்பனை குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இன்று (22.2.2011  செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்,  அவைத் தலைவர் இ.மதுசூதனன்   தலைமையிலும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்  திருத்தணி கோ. அரி, எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக்  கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும்,  எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும்,  உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்