எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.22 - திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை வெளியேற்றத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற திருத்தணி நகராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (22.2.2011 செவ்வாய்க் கிழமை) நடைபெறும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் ஒட்டுமொத்தமாக விளை நிலங்கள் எல்லாம் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, மிகப் பெரிய வணிக நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதும், அங்குள்ள மக்கள் விரட்டியடிக்கப்படுவதும் ஆங்காங்கே பெருமளவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், சீனிவாசபுரம், முஸ்லீம் நகர் மற்றும் அருந்ததிபாளையம் கிராமங்களுக்கு உட்பட்ட 160 ஏக்கர் நிலத்தை, 1 கோடியே 76 லட்சம் ரூபாய்க்கு, சென்னை, கோபாலபுரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்கு விற்க விற்பனைப் பத்திரம் தயார் செய்யப்பட்டு, திருத்தணி சார் பதிவாளர் அலுவலகத்தில் 28.10.2010 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையைச் சேர்ந்தவர்கள் மேற்படி கிராமங்களுக்குச் சென்று அங்கு காலம் காலமாக தங்களுடைய பட்டா நிலத்தில் வசித்து வந்த மக்களை வெளியேறுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகிய போது, எங்களுக்கு பத்திரப் பதிவு முக்கியம். பட்டாவின் நம்பகத்தன்மை, நிலம் யாருக்குச் சொந்தம் என்ற விசாரணையில் ஈடுபட முடியாது என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பதிவுத் துறைத் தலைவரோ, சீனிவாசபுரம், முஸ்லீம் நகர் மற்றும் அருந்ததிபாளையத்தில் 160 ஏக்கர் நிலம் குறித்து விற்பனை ஆவணம் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார். இது முழுப் nullசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக அமைந்துள்ளது.
மேற்படி விற்பனையின் மூலம் 1,200 குடும்பங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய கிராம மக்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, மேற்படி பிரச்சினை குறித்து விவாதிக்க கட்சியின் சார்பில் ஒத்தி வைப்புத் தீர்மானம் கொடுக்கப்பட்டும், அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது குறித்து முதலமைச்சர் முதல் தாசில்தார் வரை அனைவருக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்து மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீnullர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், துப்புறவுப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக நகராட்சி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பலவிதமான நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாக்கப்பட்டு உள்ளதாகவும், நகராட்சியில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், திருத்தணி நகருக்குள் உள்ளூர் பேருந்து நிலையமும், நகருக்கு வெளியே வெளியூர் பேருந்து நிலையமும் அமைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், திருத்தணி நகருக்கு உள்ளே வரும் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தை இடித்துவிட்டு வேறு பாலம் அமைக்க மைனாரிட்டி தி.மு.க. அரசு முடிவு எடுத்துள்ளதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், நகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும், நெசவாளர்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை தரப்படுவதில்லை என்றும், வீட்டு வரி விதிப்பில் ஒழுங்கான நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் தகவல்கள் வருகின்றன.
எனவே, திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று கிராமங்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கி, அங்குள்ள மக்களை வெளியேற்றத் துடிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற, திருத்தணி நகராட்சியில் நிலவும் சீர்கேடுகளுக்குக் காரணமான மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட மூன்று கிராமங்கள் விற்பனை குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், இன்று (22.2.2011 செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையிலும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வி. சோமசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் திருத்தணி கோ. அரி, எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.