முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் பட கருத்து: கருணாநிதி மீது அவதூறு வழக்கு

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.9 - சமீபத்தில் விஸ்வரூபம் படம் தொடர்பாக கருணாநிதி தெரிவித்த கருத்தை எதிர்த்து தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு மனு தாக்கல் செய்துள்ளார். முரசொலியில் விஸ்வரூபம் படம் தொடர்பாக கடிதம் எழுதிய தி.மு.க தலைவர் கருணாநிதி மீது முதல்வர் சார்பில் மாநகர அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் சென்னை செசன்சு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 31 -ந் தேதி வெளியான முரசொலி பத்திரிகையில் கருணாநிதியின் கடிதம் என்ற பகுதியில் வெளியே வந்த பூனைக்குட்டி என்ற தலைப்பில் செய்தி வெளியானது. 

இந்த செய்தியில் விஸ்வரூபம் படம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவை தொடர்புப்படுத்தி அவதூறான பொய்யான உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் கருணாநிதியின் கடிதத்தை முரசொலி பத்திரிகையில் வெளியிட்டுள்ளது. இந்த செய்தியானது தமிழக அரசுக்கும், முதல்வரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த அவதூறு செய்தி வெளியிட்ட முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம், தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்