முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவில் வீடு புகுந்து இந்திய பெண் கற்பழிப்பு

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

மாலத்தீவு, பிப். 12 - மாலத்தீவில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவரை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த செயல் அங்கு வசித்து வரும் இந்தியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அலிப் தால் அடோல் தங்கெட்டி என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர். அதேசமயம், இதுதொடர்பான விவரத்தை வெளியிட அவர்கள் மறுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியை. அங்குள்ள பள்ளியில் பணியாற்றி வந்தார். இருப்பினும் சில ஆண்டுகளாக அவர் ஆசிரியை பணியில் ்டுபடவில்லை. மாறாக வீட்டோடு இருந்து வந்தார். அவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணுக்கு கடும் மன அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து இப்பெண்ணை கற்பழித்துள்ளான் குற்றவாளி என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்