எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.22 - மதுரையில் கடந்த 2 மாதமாக தேர்தல் திருவிழா, சித்திரை திருவிழாவால் மக்கள் திக்குமுக்காடி போய்விட்டனர். ஒரு புறம் பணம் ஆறாக ஓடவும், மறுபுறம் பக்தர்கள் வெள்ளமென திரண்டதையும் காண முடிந்தது.
தமிழகத்தில் மதுரை என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அரசியல் நிகழ்வுகள் என்றாலும் சரி. கோவில் விழாக்கள் என்றாலும் சரி மதுரைக்கு நிகர் மதுரை தான். தீபாவளி, ஆயுதபூஜை, பொங்கல் போன்ற பண்டிகைகள் கூட மதுரை மாவட்டத்தில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே மதுரை நகருக்குள் மக்கள்கடல் புகுந்து விடும். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளிக்கும். இதே போல் பொங்கல் மற்ற ஊர்களில் ஓரிரு நாட்கள் கொண்டாடப்படுகிறது என்றால் மதுரை மாவட்டத்தில் ஒருமாதம் வரை கொண்டாடப்படுகிறது. அதாவது பொங்கல் பண்டிகை வந்ததுமே ஜல்லிக்க்கட்டும் வந்துவிடும். அதிலும் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் பொங்கல் பண்டிகையையொட்டிதான் நடைபெறுகிறது. எந்த அரசியல் கட்சியினர் புதிய கட்சி துவங்க வேண்டும் என்றாலும் சரி, அல்லது கட்சியின் மாநாட்டை நடத்த வேண்டுமானாலும் சரி அவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது மதுரையைத்தான்.
அதே போலத்தான் இந்த பொது தேர்தலிலும் மதுரையே கதாநாயகனாக திகழந்தது. கடந்த மார்ச் 1 ம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துமே மதுரை அரசியலில் விறுவிறுப்பு ஏற்பட்டது. முதலில் யார் யாருடன் கூட்டணி, பின்பு வேட்பாளர்கள் யார், யார், என்று அரசியல் கட்சியினர் ஒருபக்கம் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தாலும் மதுரை மக்களும் அதற்கு ஈடாக ஆர்வத்துடன் இருந்தனர். டீக்கடை, சினிமா தியேட்டர் என எங்கு கூடினாலும் இந்த பேச்சுதான் முதன்மை வகித்தது. ஒரு வழியாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மதுரையில் மூன்று நாட்கள் தங்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதே போல் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசி தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இது போக தேமுதிக தலைவர் விஜயகாந்த், காமடி நடிகர் வடிவேலு, மார்க்சிய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் பிரகாஷ்கரத், மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் என தலைவர்கள் பிரச்சாரத்தால் மதுரை அனல் பறந்தது. இது ஒருபுறமிருக்க கட்சிகளின்வேட்பாளர்கள் தினமும் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்தனர். எந்த தெருவுக்குள் சென்றாலும் அங்கு டிரம்ஸ் சத்தமும், போடுங்கம்மா ஓட்டு என்ற குரலும் கேட்டுக்கொண்டே இருந்தது. தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் அரசியல் கட்சியினர் நொந்து போக, பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் அதிரடி வாகன சோதனையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 3 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது போக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் இரவு நேரங்களில் ரோந்து சென்று ஆளும் கட்சியினருக்கு சிம்ம சொப்பணமாக விளங்கினார்.
இவரின் தீவிர நடவடிக்கையால் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி அதிகாரிகளே புலம்பி தீர்த்ததோடு மாவட்ட வருவாய் அலுவலரே சஸ்பெண்டு ஆகும் அளவுக்கு தேர்தல் ஆணையம் கராராக நடந்து கொண்டது. இதே போல், மதுரை மாநகர் கமிஷனர் கண்ணப்பன், புறநகர் மாவட்ட எஸ்பி கார்கர் ஆகியோரின் ஒத்துழைப்பும் தேர்தல் அலுவலர் சகாயத்திற்கு பெரும் துணையாக இருந்தது. தேர்தல் நெருங்க, நெருங்க மதுரையில் பணம் ஆறாக ஓடத்தொடங்கியது. ஒரு புறம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, மறு புறம் தனது கட்சிகாரர்களுக்கு பணத்தை வாரி இறைப்பது என ஆளும் கட்சியினர் மதுரையில் ஒரு பண வெள்ளத்தையே உருவாக்கினர். இதற்கு எடுத்துக்காட்டு மதுரை மேற்கு தொகுதியில் அதிக பணம் செவழிக்கப்பட்டதாகவும், மேற்கு தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருவதுதான். எப்படியோ தமிழக மக்கள் அதிகமாக எதிர்பார்த்த மதுரை தேர்தல் எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி கடந்த 13 ம்தேதி அமைதியாக நடந்து முடிந்தது.
தேர்தல் திருவிழா ஒருபுறம் நடந்து கொண்டிருக்க மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர்- ப்ரியாவிடை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். தினமும் இரவு நேரங்களில் சாமி வரும்போது மதுரை நகரின்அனைத்து பகுதிகளில் இருந்தும் பெண்கள் மாசிவீதிகளுக்கு வ ந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதனால் மதுரையில் இரவு நேரங்களில் பயங்கர போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்விஜயம் முடிந்து, மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த 16 ம் தேதி நடைபெற்றது. இந்த வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசத்தனர். அடுத்த நாள் மீனாட்சி தேரோட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பூப்பல்லக்குடன் மீனாட்சி கோவில் சித்திரை திருவிழா முடிவுக்கு வந்தது.
இதை தொடர்ந்து மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் அன்றே மலையில் இருந்து சுந்தர்ராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு மதுரைக்கு புறப்பட்டார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். மூன்றுமாவடி, தல்லாகுளத்தில் எதிர்சேவை என அழகர் பக்தர்களை தன் பக்கம் ஈர்த்துக்கொண்டார். இதையடுத்து உலக பிரசித்தி பெற்ற வைபவமான அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி கடந்த 18 ம் தேதி நடைபெற்றது. அழகர் புதிய தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். இதில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை தரிசித்தனர். அழகர் செல்லும் இடமெல்லாம் பின்னலாயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பின்தொடர்நது சென்றனர். எத்தனை முறை அழகரை பார்த்தாலும் மீண்டும் பார்க்க தூண்டும் அவரின் மகிமைதான் இதற்கு காரணம். இதைதொடர்ந்து வைகை ஆற்றுக்குள் மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம், ராமராயர் மண்டபத்தில் விடிய,விடிய தசாவதாரம் என அழகரே கதாநாயகனாக திகழ்ந்தார். இதை தொடர்ந்து தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு அழகர் பூப்பல்லக்கில் மலைநோக்கி புறப்பட்டார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை வழியனுப்பி வைத்தனர்.
மதுரை மக்கள் தேர்தல் திருவிழா, சித்திரை திருவிழாவால் திக்குமுக்காடி போய்விட்டனர். தேர்தல் திருவிழாவில் பணவெள்ளத்தாலும் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் வெள்ளத்தாலும் திணறிப்போன மதுரை இப்போதுதான் மீண்டு உள்ளது. நேற்று தான் மதுரை மக்கள் தங்கள் சொந்த வேலைகளை பார்க்க தொடங்கி உள்ளனர். தேர்தல் ஆணையத்தின் தீவிர நடவடிக்கையால் முடங்கிப்போன வியாபாரம் தற்போதுதான் சூடுபிடித்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல் பக்தர்களின் கூட்டத்தால் போக்கு வரத்து நெருக்கடியில் சிக்கி தவித்த வாகன ஓட்டிகள் நேற்று தான் பெருமூச்சு விட்டபடி நிம்மதியாக சென்றனர். எது எப்படியோ மற்ற மாவட்டத்துகாரர்கள் தேர்தல் திருவிழாவை மட்டும் சந்தித்தனர். ஆனால் மதுரை மக்கள் தேர்தல் திருவிழா, சித்திரை திருவிழா ஆகிய இரண்டையும் வெற்றிகரமாக சந்தித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
ஐ.பி.எல்.லில் 200 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்தார் ராஜஸ்தான் வீரர் சஹால்
23 Apr 2024ஜெய்ப்பூர், ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக யுஸ்வேந்திர சஹால் சாதனை படைத்துள்ளார்.
38-வது லீக் போட்டி...
-
ஐ.பி.எல். 38-வது லீக் ஆட்டம்: மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்
23 Apr 2024இந்தூர், மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரம்
24 Apr 2024நியூயார்க், இஸ்ரேல்-ஹமாஸ் போர், காசாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றால் ஆத்திரமடைந்த மாணவர்கள், அமெரிக்காவில் பல்கலைக் கழக வளாகங்களில் ஒன்று திரண்டு போராட்டம்
-
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க