முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேப்பம்பட்டில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருவள்ளூர், ஏப்.22 - திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் செல்வகுமார் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி ஜோதி, இவருக்கு அஜித் (12), அபிலாஸ் (15) என்ற 2 மகன்களும், மவித்தா (10) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு (புதன்கிழமை) வீட்டின் மாடியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்க சென்றுவிட்டனர். தன் மூத்த மகன் அபிலாசிடம் சிறிது நேரம் டி.வி பார்த்துவிட்டு தூங்க போவதாக கூறியுள்ளார். நீபோய் மாடியில் படுத்துக்கொள் எனக்கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிகாலை செல்வகுமார் மனைவி மாடியிலிருந்து கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் கனவர் பிணமாக  கண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஜோதி. உடனே செவ்வாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே திருவள்ளூர் டி.எஸ்.பி பாலசந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கோகுல்ராஜ், தயாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த மர்ம கொலை குறித்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு ப திவு செய்து, விசாரிக்கின்றனர். 

இந்த சம்பவம் வேப்பம்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்