முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலூனில் பறந்த போது தீ விபத்து: 19 பேர் சாவு

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

கெய்ரோ, பிப்.28 - எகிப்தில் சுற்றுலாப் பயணிகள் பறந்த பலூனில் தீ பிடித்து  விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.  லக்ஸார் நகரத்தில்  செவ்வாய்க்கிழமை சூர்யோதயத்தைக் காண, வெப்பக்காற்று பலூனில் 21 சுற்றுலாப் பயணிகள் பறந்தனர். 1,000 அடி உயரத்தில் பலூன் பறந்த போது, எதிர்பாராத  விதமாக தீப்பிடித்து  விபத்துக்குள்ளானது. இதில், 19 பேர் உயிரிழந்தனர்.  பலூனை இயக்குபவர் மற்றும் சுற்றுலாப் பயணி ஒருவர் பலூன்  தரையில் மோதுவதற்கு முன்னர் கீழே குதித்து உயிர் தப்பினர் என்று பலூன் பறக்க விடும் நிறுவன ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.  உயிரிழந்தவர்கள்  ஜப்பான்,  கொரியா, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்கள். விபத்துக் கான காரணம் கண்டறியப்படவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்