முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலச்சந்திரனை ராணுவம் படுகொலை செய்யவில்லையாம்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். - 4 - தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்யவே இல்லை என்று அந்நாட்டின் அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்திருக்கிறார். ஒரு நாளேட்டுக்கு இது தொடர்பாக ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில்,  பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் படுகொலை செய்யவில்லை. அப்படி நடந்திருந்தால் அது எனக்குத் தெரிந்திருக்கும். ஒரு தரப்பு சொல்வதை மட்டும் பார்க்கக் கூடாது. பல நாடுகளில் ஆட்சியைக் கவிழ்த்த அரபு வசந்தத்தை இலங்கையிலும் உருவாக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அது நடக்காது.  இந்தியா சொல்லக் கூடிய 13 வது அரசியல் சாசன திருத்தம் என்பதெல்லாம் காலாவதியாகிவிட்டது. இந்தியாவின் காஷ்மீரில் கூட மனித உரிமைகள் மீறல் இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூறியிருந்தது. இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவுடன் இருக்கிறோம். இந்தியாவிலிருந்து வரும் யாரையும் நாங்கள் திருப்பி அனுப்புவதில்லை. ஆனால் தமிழகத்தில் இருந்துதான் இலங்கை பிரஜைகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்றார் அவர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்