முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 48 பேர் சாவு

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

கராச்சி, மார்ச்.5 - பாகிஸ்தானின்  கராச்சி நகரில்  ஷியா பிரிவினர்  அதிகம் வசிக்கும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இரு குண்டு வெடிப்புச் சம்பவங்களில்  48 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 140 - க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  அப்பாஸ் நகரில் பிரார்த்தனையை முடித்து விட்டு மசூதியில் இருந்து மக்கள் வெளியேறுகையில்  காரில்  மறைத்து  வைக்கப்பட்டிருந்த  குண்டு இரவு 7 மணிக்கு  வெடித்தது.  அதே பகுதியில்  10 நிமிட இடைவெளிக்குப் பிறகு மற்றொரு குண்டு வெடித்தது. இச்சம்பவத்துக்கு இது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் ஷியா பிரிவு மக்கள் மீது  அவ்வப்போது தாக்குதல் நடத்தும் தடை செய்யப்பட்ட லஷ்கர் - இ - ஜாங்வி பயங்கரவாத  அமைப்பு, இத்தாக்குதலை  நடத்தியிருக்கலாம் என்று சந்தேதிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்