முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

``ஈஸ்டர் திருநாள்'' ஜெயலலிதா வாழ்த்து

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.24 - கிறிஸ்தவர்களின் முக்கிய திருநாளாம் ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  ஜெயலலிதா தனது ஈஸ்டர் தினவாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மானுடத்தின் விடிவெள்ளியாகிய இயேசு பெருமான் உயிர்த்தெழுந்த ஒப்பற்ற ஈஸ்டர் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் எனதருமை கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

சொல்லொண்ணா இன்னல்களுக்கும், அவமானங்களுக்கும், சித்ரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்ட இயேசுபிரான் உயிர்த்தெழுந்த பொன்னாளாகிய ஈஸ்டர் திருநாள், இறைமகன் பாவத்தை வெற்றி கொண்ட நன்நாளாகும். கர்த்தராகிய இயேசுபிரானின் கருணையால் எங்கும் அமைதியும் ஒற்றுமையும் உயிர்த்தெழட்டும்; என்றென்றும் உயிர்ப்போடு திகழட்டும் என்று இறைவனை பிரார்த்தித்து, கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன். 

இவ்வாறு ஜெயலலிதா வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்