முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்மாடி மீது அமலாக்கத்துறை பிடி இறுகுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி,ஏப்.24  - சொத்துக்கள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி காமன்வெல்த் விளையாட்டு போட்டி அமைப்பு குழு முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லியில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பெரும் அளவில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து அப்போட்டியின் அமைப்பாளராக இருந்த கல்மாடி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் சுரேஷ் கல்மாடியின் சொத்துக்கள் பற்றி விவரங்களை கேட்டு அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் அனைத்து வங்கி கணக்கு விவரங்கள், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் துவங்கும் முன் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்கள், கடந்த சில ஆண்டுகளில் அவரது அன்னிய செலவாணி கணக்கு விவரங்கள், அவர் செய்துள்ள முதலீடுகள் போன்ற விவரங்களை இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்யும் படி அமலாக்கத்துறை உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது. 

இந்த விவரங்கள் கிடைத்த பிறகு கல்மாடியிடம் மீண்டும் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, போட்டி துவங்கும் முன் லண்டனில் நடந்த பிரிட்டிஷ் ராணி தொடர் ஓட்டம் குறித்த விவரம் கேட்கப்பட்டுள்ளது. நீதி பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை அறிய இது போன்ற விவரங்களை அமலாக்கத்துறை கேட்டுள்ளதாக தெரிகிறது. 

காமன்வெல்த் விளையாட்டு போட்டி பணிகளில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. காமன்வெல்த் விளையாட்டு போட்டி அதிகாரிகள், கட்டுமான பணியில் ஈடுபட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்