முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி - போட்டி - மும்பை இந்தியன்ஸ் சென்னையை வென்றது

ஞாயிற்றுக்கிழமை, 24 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, ஏப். 24 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மும்பையில் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பரபரப்பான ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி முன்னிலை பெற்றது. 

இந்தப் போட்டியில் ரோகித் சர்மா அபாரமாக பேட்டிங் செய்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். ராயுடு மற்றும் சைமண் ட்ஸ் ஆகியோர் அவருக்கு பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஹர் பஜன் சிங் அமர்க்களமாக பந்து வீசி 5 முக்கிய விக்கெட்டுகளை கைப் பற்றினார். மலிங்கா, படேல் மற்றும் பொல்லார்டு ஆகியோர் அவரு க்குப் பக்கபலமாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் மும்பையில் உள்ள வாங்க்டே மைதா  னத்தில் 25 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் டெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில், கேப்டன் டெண்டுல்கர் மற்றும் ஆர்.சதீஷ் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

மும்பை அணி இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 154 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமும் அடித்தனர். 

மும்பை அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோகித் சர்மா அதி கபட்சமாக, 48 பந்தில் 87 ரன்னை எடுத்தார். இதில் 8 பவுண்டரி மற்று ம் 5 சிக்சர் அடக்கம். இறுதியில் அவர் பொலிஞ்சர் வீசிய பந்தில் ஹஸ் சேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

அடுத்தபடியாக, ஆல்ரவுண்டர் சைமண்ட்ஸ் 26 பந்தில் 31 ரன்னை எடு த்தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, கீப்பர் ரா யுடு 29 பந்தில் 27 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். கே ப்டன் டெண்டுல்கர் 5 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

சென்னை கிங்ஸ் அணி தரப்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான பொலிஞ்சர் 30 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, மார் கெல் மற்றும் ரன்டிவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

சென்னை அணி 165 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இல க்கை மும்பை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 156 ரன்னை எடுத்தது. 

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி பரபரப்பான இந்த லீக் ஆட்டத் தில், 8 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. 

சென்னை அணி சார்பில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான பத்ரிநாத் அதிகபட்சமாக, 48 பந்தில் 71 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். தவிர, ஹஸ்சே 33 பந்தில் 41 ரன்னையும், விஜய் 12 ரன்னையும் எடுத்த னர். 

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் முன்னணி சுழற் பந்து வீச்சாளரா  ன ஹர்பஜன் சிங் 18 ரன்னைக் கொடுத்து 5 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். மலிங்கா 20 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, படேல் மற்றும் பொலார்டு ஆகியோர் தலா ஒரு விக்கெ ட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்