முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவதூறு வழக்கு: விஜயகாந்த் 27-ந் தேதி ஆஜராக சம்மன்

வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013      சினிமா
Image Unavailable

 

நாகர்கோவில், மார்ச்.23 - தே.மு.தி.க. தலைவர் விஜயதாந் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக நாகர்கோவில் செசன்சு கோர்டில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளரும், வக்கீலுமான ஞானசேகர் வழக்கு தாக்கல் செய்தார்.

இதனை விசாரிக்க நீதிபதி குமரகுரு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வருகிற 27-ந் தேதி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதற்கான சம்மன் பிறக்பிக்கப்பட்டதை அடுத்து வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமார்த்தாண்டன், நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார்.

அங்கு தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நாகர்கோவில் கோர்ட்டு பிறப்பித்த சம்மனை நேரில் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்