முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர் கவுதம்மேனன் மீது மேலும் ஒரு வழக்கு

புதன்கிழமை, 27 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.28 - சினிமா இயக்குனர் கவுதம்மேனன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திரைப்பட இயக்குனர் கவுதம்மேனன் மீது சென்னை தி.நகரை சேர்ந்த ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனத்தின் இயக்குனர் ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட இயக்குனர் கவுதம்மேனன் தனக்கு ரூ.4.5 கோடி கடன் பாக்கி கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி சுதாகர் விசாரித்து கவுதம்மேனனுக்கு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார். 

இந்நிலையில் ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனத்தின் இயக்குனர் எல்டர் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுதம்மேனன் மீது புதிய வழக்கு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில் கவுதம்மேனனுக்கு, `நீதானே என் பொன் வசந்தம்' படம் தயாரிக்க ரூ.10 கோடியே 65 லட்சம் கடன் கொடுத்ததாகவும், இதுவரை அவர் கடனை திருப்பி தரவில்லை எனவும் கூறியிருந்தார். 

இந்த வழக்கை நீதிபதி சுதாகர் நேற்று விசாரித்து இன்று பதிலளிக்க கவுதம்மேனனுக்கு உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்