முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் கொள்ளையை தடுக்க மொரீஷியசுடன் கூட்டு

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

போர்ட்லூயிஸ்,ஏப்.26  - இந்தியப் பெருங்கடலில் கடல் கொள்ளையர்களின் அட்டூழியத்தை ஒழிப்பதில் மொரீஷியசுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தெரிவித்தார். 5 நாள் பயணமாக மொரீஷியஸ் சென்றிருக்கும் பிரதமர் விமான பயணத்தின் போது செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். மொரீஷியசில் பயங்கரவாத ஒழிப்பு பிரிவை உருவாக்குவதற்கு இந்தியா உதவும் என்றும் அவர் கூறினார். இரு தரப்பு, பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து மொரீஷியஸ் தலைவர்களுடன் பேசவிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இரு நாட்டு உறவுகளை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல இந்த பேச்சுக்கள் உதவும் என்றார். ஐ.நா. பாதுகாப்பு அலையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மொரீஷியஸ் ஆதரவு தெரிவித்து வருவதையும் பிரதீபா நினைவு கூர்ந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்