முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்டு

சனிக்கிழமை, 30 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

நாமக்கல் மார்ச். - 31 - நிலம் வாங்கி தருவதாக கூறி செக் மோசடி செய்த பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு நாமக்கல் கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்தவர் பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா,கண்ணா லட்டு தின்ன ஆசையா, அழகன் அழகி, 9 ல் குரு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.கண்ணா லட்டு தின்ன ஆசையா பட வெற்றிக்கு பின் மிகவும் பிரபலமாகவும், பல படங்களில் நடித்தும் வருகிறார், இவர் மீது கடன் வாங்கி தருவதாகவும், நிலம் வாங்கி தருவதாகவும் கூறி சிலரிடம் பணம் வாங்கி அதற்கு செக் கொடுத்து செக் ரிட்டன் ஆனதால் பலர் வழக்கு தொடர்ந்தனர். சமீபத்தில் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் ரிக் அதிபர் பொன்னுசாமி. இவரும், பவர் ஸ்டார் சீனிவாசனும் நண்பர்கள். கடந்த 2009 ல் பவர் ஸ்டார் சீனிவாசன் சினிமா படம் எடுப்பதற்காக பொன்னுசாமியிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கினாராம். அந்த பணத்தை பல முறை பொன்னுசாமி திரும்ப கேட்டுள்ளார். அதற்கு சீனிவாசன் செக் ஒன்றை கொடுத்தார். அந்த செக்கை பொன்னுசாமி வங்கியில் செலுத்தியபோது அது பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து பொன்னுசாமியின் மேலாளர் வெங்கடாஜலம் நாமக்கல் மாவட்ட குற்றவியல் முதன்மை கோர்ட்டில் கடந்த 2009 ல்வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக பவர் ஸ்டார் சீனிவாசன் நாமக்கல் கோர்ட்டில் ஆஜராகி வந்தார். நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணை வந்தது. ஆனால் நடிகர் சீனிவாசன் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி செக் மோசடி செய்த பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்யுமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்