முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபா மறைவு - கண்ணீர் விட்டு அழுதார் சச்சின்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      விளையாட்டு
Image Unavailable

புட்டபர்த்தி,ஏப்.26 - 4 வது ஐ.பி.எல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்பதற்காக மும்பை அணியின் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் நேற்று ஐதராபாத்தில் தங்கியிருந்தார். 

இந்நிலையில்தான் நேற்று அதிகாலை புட்டபர்த்தி சாய்பாபாவின் மரண செய்தி குறித்து அறிவிப்பு வெளியானது. சாய்பாபாவின் தீவிர பக்தரான டெண்டுல்கர் இதனை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நேற்று முன்தினம் டெண்டுல்கருக்கு 38 வது பிறந்த நாளாகும். 

சாய்பாபாவின் மறைவையடுத்து தனது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்தார் டெண்டுல்கர். பின்னர் புட்டபர்த்திக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவும் அவர் முடிவு செய்தார். அதன்படி நேற்று காலையில் தனது மனைவியுடன் புட்டபர்த்திக்கு சென்ற அவர் அங்கு பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சாய்பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடம் அருகே மவுனமாக அமர்ந்த சச்சின் சிறிது நேரத்தில் கண்ணீர் விட்டு அழுதார். பல முறை கண்ணீரை துடைத்துக் கொண்டே இருந்தார். இருப்பினும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சச்சினின் மனைவி அஞ்சலியும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதார். சில நிமிடங்கள் சாய்பாபாவுக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்தி விட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்