முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி சஞ்சய் தத் 18-ல் சரணடைகிறார்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

மும்பை, ஏப். 8 - சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இந்தி நடிகர் சஞ்சய் தத் வரும் 18 ம் தேதி சரண்டர் ஆக முடிவு செய்துள்ளார். கடந்த 1993 ம் ஆண்டு மும்பையில் நடந்த வெடிகுண்டு வழக்கில் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் 21 ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அப்போது சஞ்சய்தத்துக்கு நீதிமன்றத்தில் சரண் அடைய 4 வாரம் அவகாசம் அளித்தது. இந்த தீர்ப்பு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

சஞ்சய்தத்துக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று நடிகர், நடிகைகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் மன்னிப்பு கோரப்போவதில்லை என்றும் உருக்கமுடன் சஞ்சய்தத் தெரிவித்தார். தற்போது தான் நடிக்கும் படங்களை முடித்துக்கொடுக்கும் வேலையில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். 'கன்சக்கர், 'சஞ்ஜர் ஆகிய 2 படத்தை முடித்துவிட்டார். 

கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் 'போலீஸ் கிரி படப்பிடிப்பில் அவர் நடித்து வருகிறார். இதுதவிர ராஜ்குமார் ஹிரானி இயக்கும் ஆமிர்கானின் பிகே என்ற படம் மற்றும் இம்ரான் ஹாஷ்மியின் 'அங்லி படங்களையும் முடிக்க வேண்டி உள்ளது. இதற்காக ஆமிர்கான் தனது கால்ஷீட்டை மாற்றி அமைத்துள்ளார். வரும் 13 ம் தேதிக்குள் எல்லா ஷூட்டிங்கையும் முடித்து விட்டு அதற்கு மறுநாள் முதல் தொடங்கி 17ம் தேதி டப்பிங் பேசுகிறார். 18 ம் தேதி சஞ்சய்தத் கோர்ட்டில் சரண் அடைய முடிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்