எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், பிப்.22 - திண்டுக்கல்லில் பழுதடைந்த இலவச கலர் டி.வி.க்களை தி.மு.க.வினர் வழங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதனை அவர்களிடமே திருப்பிக் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மைனாரிட்டி தி.மு.க. அரசு பதவியேற்றதில் இருந்து பொதுமக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் நல்ல திட்டங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. இதனால் வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தர முடியவில்லை. ஒருசில திட்டங்களை செயல்படுத்தினாலும் அத்திட்டங்களின் மூலமாக தி.மு.க.வினரே பயனடைந்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க இலவசம் என்ற பெயரில் தமிழக மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என நியாய விலைக்கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த அரிசி புளுத்துப் போய் சாப்பிடுவதற்கு லாயக்கற்றதாக உள்ளது. இதனால் தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர்கள் நியாயவிலைக்கடை பணியாளர்களை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு மூடை, மூடையாக கேரளாவிற்கு கடத்தி வருகின்றனர். இதேபோன்று நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக அறிவித்தனர். இது அறிவிப்போடு நிற்கிறது. விவசாயிகளுக்கு கூறியபடி நிலத்தைத் தராமல் ஏமாற்றி வருகின்றனர். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதாகக் கூறி வீட்டிற்கு ரூ.75 ஆயிரம் மானியம் வழங்குவதாக தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. இன்றுள்ள சூழ்நிலையில் ரூ.75 ஆயிரத்தை வைத்துக் கொண்டு ஒரு சிறிய அறையைக் கூட கட்ட முடியாத அளவிற்கு கட்டுமானப் பொருட்களின் விலையும், கூலியாட்கள் சம்பளமும் உயர்ந்துள்ளது. இது மக்களை ஏமாற்றுவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டமாகும்.
விவசாயிகளுக்கு இலவசமாக மோட்டார் பம்ப் செட் வழங்கப்படும் என தி.மு.க. அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நேரம், அறிவிக்கப்படாத மின்வெட்டு நேரம் என பல்வேறு வகையில் பட்டியலிட்டு இருளடையச் செய்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் தி.மு.க. அரசு விவசாயிகளின் காதில் பூ சுற்றுவதற்காக மோட்டார் பம்ப் செட் திட்டத்தை அறிவித்துள்ளனர். இதேபோன்று இலவச கலர் டி.வி. வீடு தவறாமல் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. திண்டுக்கல் நகருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் 27,000 கலர் டி.வி.க்கள் வந்துள்ளன. அதனை தேர்தல் சமயத்தில் கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று விடலாம் என தி.மு.க.வினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்றுமுன்தினம் திண்டுக்கல் நகர் 38, 39, 41, 42, 43, ஆகிய வார்டு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு இலவச கலர் டி.வி.க்களை வழங்கினர். இதில் பெரும்பாலோனோருக்கு கலர் டி.வி.க்கள் வழங்கப்படவில்லை.
இதனால் திண்டுக்கல் மேட்டுப்பட்டி சாலை பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு விரைவில் கலர் டி.வி. வழங்க ஆவன செய்வதாக நகராட்சி அதிகாரிகள் கூறி சமாதானம் செய்தனர். மேலும் டி.வி.க்களை வாங்கிச் சென்ற சிலர் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அது பழுதடைந்திருந்தது தெரியவந்தது. ஓட்டை உடைசலாக இருந்த டி.வியை பொதுமக்கள் தி.மு.க.வினரிடமே திருப்பி அளித்தனர். இதனால் சுமார் 50க்கும் மேற்பட்ட டி.வி.க்களை நகராட்சி அதிகாரிகள் திரும்பப் பெற்று நகராட்சிக்கு கொண்டு சென்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் கலர் டி.வி.க்களை வாங்கிய பலர் இன்னும் அட்டைப் பெட்டியைத் திறந்து பார்க்காமலேயே உள்ளனர். அதனைப் பார்த்தால் குட்டு மேலும் வெளிப்படும்.
தேர்தல் நெருங்கி வருவதால் அவசரகதியில் டி.வி.க்களை இரவு நேரங்களில் வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று விடலாம் என தி.மு.க.வினர் தப்புக்கணக்கு போடுகின்றனர். இது உண்மையிலேயே பலிக்குமா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியும்.
ரகசியம்...
திண்டுக்கல் நகரில் பழுதடைந்து போன இலவச கலர் டி.வி.க்களை நகராட்சி அதிகாரிகள் லாரியில் ஏற்றிக் கொண்டு நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கெல்லாம் டி.வி. விரைவில் தரப்படும் என நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார். இதுகுறித்து நமது நிருபர் அவரிடம் கேள்வி எழுப்புகையில், ஏற்கனவே திண்டுக்கல் நகருக்கு டி.வி. வழங்குவதில் பற்றாக்குறை உள்ளது. டி.வி கிடைக்காதவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இச்சூழ்நிலையில் பழுதடைந்த டி.வி.க்கு பதிலாக புதிய டி.வி. எப்படி வழங்குவீர்கள்? என்று கேட்டதற்கு நகராட்சி ஆணையாளர் லெட்சுமி பதிலளிக்கையில் ''அது ரகசியம்'' என ஒரே வார்த்தையில் கூறி விட்டு நகர்ந்து சென்றார். அது என்ன ரகசியமோ, ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.