முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரணமடைந்த காவல் துறையினர் குடும்பத்திற்கு நிதியுதவி

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 - உடல் நலக்குறைவு, மாரடைப்பு மற்றும் சாலை விபத்துக்களில் அகால மரணமடைந்த நான்கு காவல் துறையினருக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களின்  குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி செய்ய உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எஸ்.ஜி.லியாகத் உசேன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 4.4.13 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும்

கடலூர் மாவட்டம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்த பி.பழமலைநாதன் 5.4.13 அன்று திண்டுக்கல் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணி புரிந்து வந்த ஆர்.சேகர் 8.4.13 அன்று மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி புரிந்து வந்த எஸ்.துரைசாமி 20.4.13 அன்று அய்யம்பாளையம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 11.4.13 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

காவல் துறை உதவி ஆய்வாளர் லியாகத் உசேன், சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், தலைமைக் காவலர்கள் பழமலைநாதன் மற்றும் துரைசாமி ஆகியோரின் அகால் மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல் நலக்குறைவால் காலமான காவல் துறை உதவி ஆய்வாளர் லியாகத் உசேன், மாரடைப்பால் காலமான சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் சாலை விபத்துக்களில் உயிரிழந்த தலைமை காவலர்கள் பழமலைநாதன் மற்றும் துரைசாமி ஆகியோர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago