முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பிரமுகர்கள் மறைவு: முதல்வர் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.17 - சென்னை- நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல்  தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், பேரூராட்சி மன்ற 9 வது வார்டு உறுப்பினருமான எஸ்.பி.செல்வராஜ், சென்னை தெற்கு மாவட்டம், சைதாப்பேட்டை பகுதி 138 வது வட்டக் கழக இணைச் செயலாளர் எஸ்.பாரதி ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர் செல்வராஜ், அன்புச் சகோதரி பாரதி ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.   

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்