எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,ஏப்.18 - சென்னை விமான நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர் வைக்க எதிர்ப்பு தெரிவித்த கருணாநிதிக்கு மதுரை மாமன்ற கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. எம்ஜிஆர் பெயரை வைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் ராஜன்செல்லப்பா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆணையாளர் நந்தகோபால், துணை மேயர் ஆர்.கோபாலகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல், கே.ராஜபாண்டி மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ராஜன்செல்லப்பா முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் திமுக கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து மாமன்றத்துக்குள் வந்தனர். முதல்வர் ஜெயலலிதா மதுரை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 247 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்ததற்கும்,சித்திரை முதல்நாளை தமிழ்புத்தாண்டாக மீண்டும் அறிவித்து தமிழுக்கு சுதந்திரம் வாங்கி தந்ததற்கும், மதுரையில் ரூ.130 கோடியில் 2 உயர்மட்ட பாலம் அமைக்க உத்தரவிட்டதற்கும், மேலும் மதுரை அருகே துணைநகரம் அமைப்பதற்கு அறிவிப்பை வெளியிட்டதற்கும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் 2வது முனையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அதே நேரத்தில் விமான நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை வைப்பதற்கு கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்ட சபையில் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் ஆதரித்து பேசிவிட்டு வெளியே வந்து எதிர்ப்பதாக கூறியுள்ளார். இதே போல் திமுக தலைவர் கருணாநிதியும் எல்லா பிரச்சினையிலும் இரட்டை வேடம் போடுவது போல் இதிலும் இரட்டை வேடம் போட்டுள்ளார். இதை கண்டிப்பதாகவும் கூறினார்.
இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று கூச்சல் போட்டனர். கருணாநிதியை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என கேட்டனர். இதற்கு அதிமுக கவுன்சிலர்களும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மாமன்றத்தில் கூச்சல் போட்டு கொண்டிருந்ததால் திமுக கவுன்சிலர்களை வெளியேற்றும் படி மேயர் உத்தரவிட்டார். நீங்கள் ஏதாவது பிரச்சினை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே கருப்பு சட்டை அணிந்து கூட்டத்திற்கு வருகிறீர்கள். நீங்கள் வந்ததுமே உங்களை வெளியேற்றி இருக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டபடி மாமன்றத்தில் இருந்து வெளியேறினர்.
இதை தொடர்ந்து விவாதம் தொடர்ந்து நடந்தது. மதுரை தெற்கு மண்டல தலைவர் பெ.சாலைமுத்து பேசும் போது, மதுரை மாநகராட்சியில் புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 43 டிரைவர்கள் பல ஆண்டுகளாக மாநகராட்சியில் வேலை பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நியமனம் செய்ய வேண்டும். வரை படஅனுமதியை உதவி கமிஷனர் வழங்க அனுமதி அளிக்க வேண்டும். அம்மா திட்டம் நல்ல முறையில் செயல்படுகிறதா என்பதை அறிய குழு அமைக்கப்பட வேண்டும். மண்டல தலைவர்களுக்கு உரிய அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றார்.
மேயர்- இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கே.ராஜபாண்டியன்(மேற்கு மண்டல தலைவர்) மதுரை மாநகராட்சியில் அம்மா திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்கு மண்டலத்தில் உள்ள வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் மற்ற பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே கூடுதல் வாகனங்களை ஒதுக்க வேண்டும். மதுரை மாநகராட்சிக்குஉட்பட் அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே உள்ளது. எனவே ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.5 லட்சம் மதிப்பிலான பணிகளை செய்ய மண்டல அளவிலேயே அதிகாரம் உள்ளது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேயர் - இது குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
கே.ஜெயவேல்(வடக்கு மண்டல தலைவர்) கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் கவுன்சிலர்களுக்கு படித்தொகை ரூ.800 வழங்கப்படுகிறது. அதை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேயர் - உங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது. மேலும் மதுரை 50வது வார்டில் தினசரி மார்க்கெட்டில் நீர்தொட்டி கட்டுவது, வைகை குடிநீர் திட்ட பராமரிப்பு ஊழியர்களை தினக்கூலிகளாக நியமிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக கவுன்சிலர்களுக்கு இலவச சட்டை வழங்க தயார் -மேயர்
மாமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்த போது திமுக கவுன்சிலர்கள் க ருப்பு சட்டை அணிந்து வந்தனர். அப்போது பேசிய மேயர் மாமன்ற கூட்டத்திற்கு நீங்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து களங்கம் ஏற்படுத்துகிறீர்கள்.உங்களிடம் வெள்ளை சட்டை இல்லை என்றால் மாமன்றம் சார்பில் உங்களுக்கு வெள்ளை சட்டை இலவசமாக வழங்க தயார் என்று மேயர் கூறியதும், மாமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி
மதுரை மாநகராட்சியின் கீழ் இயங்கும் 66 பள்ளிகளில் தற்போது 4 பள்ளிகளில் மட்டுமே ஆங்கில வழி கல்வி முறை உள்ளது. மாநகராட்சி பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ, மாணவிகள் ஆங்கில வழி கல்வி முறையில் பயன்பெறுவதற்காக 20ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 20 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறையை நடைமுறைப்படுத்த அரசிடம் அனுமதி கோர மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழை: சென்னையில் இருந்து 2-வது நாளாக விமான சேவை ரத்து
18 Apr 2024சென்னை, ஐக்கிய அரபு அமீரகத்தில் பெய்த கனமழையால் நேற்று இரண்டாவது நாளாக சென்னையில் இருந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.