முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லால்குடி ஜெயராமன் மறைவு: முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்.23 - வயலின்மேதை லால்குடி இசைத்துறைக்கு பேரிழப்பாகும் என முதல்வர் ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். லால்குடி ஜெயராமன் மறைவு குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிஇருப்பதாவது:-

இசைத் துறையில் எட்ட முடியாத சாதனைகளை தொட்ட பிரபல வயலின் மேதையும், சிறந்த ஓவியரும், இசையமைப்பாளருமான லால்குடி ஜெயராமன் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.  

இசைக் குடும்பத்தில் பிறந்து, மனதைக் கரைக்கும் உன்னத இசைக்கு சொந்தக்காரரான லால்குடி ஜெயராமன் அவர்கள் இசையின் பல பரிமாணங்களை இந்த உலகிற்கு உணர்த்தியவர்.  இசை மாமேதைகளான ஜி.என்.பி., செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் கச்சேரிகளை தனது வயலினால் அழகுபடுத்தியவர் திரு. லால்குடி ஜெயராமன் அவர்கள். தனிக் கச்சேரிகள் நடத்தி இசை ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்.  

தன்னுடைய வயலின் மூலம் வார்த்தைகளை ஒலிக்கச் செய்தவர்.  

கடினமான ராகங்களான நீலாம்பரிூ, தேவகாந்தாரிூ ஆகிய இரண்டு ராகங்களில் வர்ணம் அமைத்து இசை மேதைகளை இன்ப அதிர்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்.  சைங்கீத நாடக அகடமிூ, சைங்கீத சடாமணிூ, மத்திய அரசின் பைத்மஸ்ரீூ, பைத்மபூஷண்ூ உள்பட பல விருதுகளைப் பெற்றவர் வயலின் மாமேதை லால்குடி ஜெயராமன் அவர்கள். இவர் இசை அமைத்த ``சிங்காரம்'' என்ற திரைப்படம், சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை இவருக்கு பெற்றுத் தந்தது.  இவர் இசையமைத்து அரங்கேற்றிய ``ஜெயஜெய தேவி'' நாட்டிய நாடகம் பல்வேறு நாடுகளில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது. 

லால்குடி ஜெயராமன் அவர்களின் மறைவு இசைத் துறைக்கு, குறிப்பாக கர்நாடக இசைத் துறைக்கு மிகப் பெரிய பேரிழப்பாகும். இவர் விட்டுச் சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.    

லால்குடி ஜெயராமன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்