முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேதினம் கொண்டாட அனுமதி - தா.பாண்டியன்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.27​ - தமிழ்நாட்டில் மேதின கொண்டாட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது என்று தா.பாண்டியன் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:​ தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை திருநாளான மே தினத்தன்று, நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்று போலீசார் கூறிவிட்டனர். இதையடுத்து மேதின நிகழ்ச்சிகளை இந்த ஆண்டில் வழக்கம்போல கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று, மேதின நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று கூறியுள்ளது. அனுமதி வழங்குவது தொடர்பான கடிதம், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி இந்த கடிதங்களை அனுப்பியுள்ளார். எனவே இந்த ஆண்டும் வழக்கம்போல், மேதினத் தன்று கொடியேற்றுதல், பேரணி, பொது கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்