முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலிவுட்நடிகை ஷில்பாஷெட்டி, கணவர் மீதுரூ.8 லட்சம் மோசடி புகார்

செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

 

ஜெய்பூர்: மே, - 1 - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது ஒருவர் ரூ.8 லட்சம் மோசடி புகார் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள கிரிக்கெட் அகாடமியின் புரமோட்டர் ஆனந்த் சிங். அவர் பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் இர்பான் கான் ஆகியோர் மீது பொது இடங்களில் புகைப்பிடப்பதாக புகார் கொடுத்தார். இந்நிலையில் அவர் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது புகார் தொடர்ந்துள்ளார். ஷில்பாவும் அவரது கணவரும் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் போட்டி தொடர்பாக தன்னிடம் இருந்து ரூ.8 லட்சம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வரும் 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆனந்த் சிங்கிற்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்