முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவர்ஸ்டார் மீது மருத்துமனை ஊழியர்கள் புகார்

வியாழக்கிழமை, 9 மே 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, மே.10 - 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது சமீபத்தில் அம்பலமானது. வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் சென்னையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் ஆகியோரிடம் இவர் கோடிக்கணக்கான ரூபாயை அபேஸ் செய்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து சீனிவாசனை போலீசார் ஏற்கனவே ஒருமுறை காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவரை மீண்டும் 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் நேற்று இரவு முதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 நாட்கள் விசாரணை முடிந்த பின்னர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட உள்ளார். இதற்கிடையே பவர் ஸ்டார் சீனிவாசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் எங்களுக்கு தரவேண்டிய நிலுவையிலுள்ள  எங்கள் ஊதியத்தை நேரடியாகவும் தொலை பேசி மூலமாக கேட்டபோது இன்று நாளை தருகிறேன். என்று கூறி இணைப்பை சட்டென்று துண்டித்து விட்டு ஊதியத்தை தர மறுக்கின்றனர். அவர்களிடம் இருந்து பெற்றுத் தருமாறு இப்புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளரிடம் ஒரு ஊழியர் கூறுவது:-

நான் ஆனந்தி  மருத்துவமனையில் பிசியோதரப்பியாக கடந்த 6 மாதமாக பணியாற்றி வருகிறேன்.  நான் வேலையில் சேர்ந்த முதல் மட்டும் சம்பளம் வாங்கினேன்.கடந்த 5 மாதமாக சம்பள தரவில்லை.உடனடியாக சம்பளம் பெற்று தருமாறு கேட்டுக்கொண்டார் ஊழியர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட மாநகரை போலீஸ் கமிஷ்னர் ஜார்ஜ் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்