எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லண்டன், ஏப். - 30 - சார்லஸ்-டயானா தம்பதிகளின் மகனான பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமிற்கும் அவரது 10 ஆண்டுகால காதலி கேதரின் மிடில்டனுக்கும் நேற்று லண்டனில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. லண்டனில், வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் உள்ள தேவாலயத்தில் இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். திருமணத்தைக்காண சுமார் 10 லட்சம் பேர் குவிந்ததால் லண்டன் மாநகரமே குலுங்கிப்போனது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேதரின் மிடில்டனை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். அதன்படி அவர்களின் திருமணம் நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் தேவாலயத்தில் இந்த திருமணத்தை கோலாகலமாக நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமணத்திற்கான விரிவான ஏற்பாடுகள் நடந்துவந்தன. இதனால் லண்டன் நகரமே கடந்த சில நாட்களாக விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது. இந்த திருமண வைபவத்தில் பங்கேற்க 50 நாட்டு தலைவர்கள் உட்பட சுமார் 2000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நேற்று காலை இங்கிலாந்து நேரப்படி 8.15 மணிக்கு துவங்கின. இதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் தேவாலயத்திற்கு வந்தவண்ணம் இருந்தனர். அவர்களைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் குடும்பத்தினரும் அடுத்தடுத்து தேவாலயத்திற்கு வந்தனர். மணமகள் கேதரின் குடும்பத்தினர் தேவாலயம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கி இருந்தனர். முன்னதாக மணமகன் வீட்டார் தேவாலயத்திற்கு வந்ததும், மணமகள் குடும்பத்தினரும் தேவாலயத்திற்கு அழைத்துவரப்பட்டனர். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4.30) திருமண நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. பிரிட்டீஷ் ராஜகுடும்பத்து திருமணங்கள் எப்போதுமே மிக விமர்சையாக நடத்தப்படும். அதைப்போலவே இந்த திருமணமும் வெகு விமரிசையாக நடந்தது. அதுவும் வில்லியம் பட்டத்து இளவரசர் என்பதால் கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தன. இந்த திருமணத்தைக் காண தேவாலயம் பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு குவிந்திருந்தார்கள். தாமதமாக சென்றால் இடம் கிடைக்காது என்பதால் நேற்று முன்தினமே தேவாலயம் பகுதியிலும், மணமக்கள் அரண்மனைக்கு செல்லும் பகுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். இவர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அப்பகுதிகளில் திரண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் உலகமே ஆவலோடு எதிர்பார்த்த பிரிட்டீஸ் இளவரசர் வில்லியம் அவரது காதலி கேதரின் ஆகியோரது திருமணம் நேற்று விமரிசையாக நடந்தது. இதையொட்டி வெஸ்ட் மினிஸ்ட்டர் அபேயில் உள்ள தேவாலயம் புதுப் பொலிவோடு காணப்பட்டது. அங்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. ஆலயம் புதுப் பொலிவோடு காணப்பட்டது. முன்னதாக மணமக்கள் இருவரும் ஊர்வலமாக காரில் அழைத்துவரப்பட்டனர். அவர்களை வழியெங்கும் திரண்டிருந்த மக்கள் பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தனர். பின்னர் தேவாலயத்திற்கு மணமக்கள் வந்து சேர்ந்தனர். தனது 10 ஆண்டுகால காதலி கேதரின் விரலில் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் மோதிரம் அணிவித்து திருமணத்தை உறுதி செய்தார். அப்போது இருவரும் திருமண உறுதியேற்றுக்கொண்டனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த ஆரவாரத்தால் அந்த தேவாலயமே அதிர்ந்தது. பின்னர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. டயானா மறைவுக்கு பிறகு இப்படி ஒரு சிறப்பான திருமணம் லண்டனில் நேற்று நடைபெற்றுள்ளது. மேலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது சார்லஸ், டயானா திருமணத்திற்கு பிறகு அரச குடும்பத்தில் இப்படி ஒரு திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் மண்டியிட்டு நிற்க திருமண ஒப்பந்தம் வாசிக்கப்பட்டது. இந்த திருமணத்தில் 50 நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 90 தொலைக்காட்சிகள் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தன. 2001 ம் ஆண்டு ஆண்ட்ரூ பல்கலையில்தான் கேத்ரினை சந்தித்தார் இளவரசர் வில்லியம். இருவருக்கும் அப்போது காதல் மலர்ந்தது. இந்த காதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நேற்று திருமணத்தில் முடிந்துள்ளது. ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்தான் கேதரின். நேற்று இளவரசரை கரம் பிடித்ததன் மூலம் இவரும் அரச குடும்பத்தில் இணைந்து விட்டார். 350 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருமணம் முடிந்ததும் தம்பதிகள் இருவரும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் புறப்பட்டு சென்றனர். சார்லஸ், டயானா தம்பதிகள் சென்ற அதே சாரட் வண்டி நேற்று இவர்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இவர்களை பின் தொடர்ந்து ராணி எலிசபெத்தும் சென்றார். இவர்களது அணிவகுப்பு பக்கிம்ஹாம் அரண்மனையை அடைந்தது. முன்னதாக இவர்கள் செல்லும் வழியில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்து தம்பதிகளை பார்த்து உற்சாக வெள்ளத்தில் கையசைத்தனர். பின்னர் அரண்மனை மாடத்திற்கு சென்று தம்பதிகள் மக்களுக்கு காட்சியளித்தனர். அப்போது இளவரசர் வில்லியம், கேதரினுக்கு முத்தம் கொடுத்து அன்பை பரிமாறிக் கொண்டார். முன்னதாக, இந்த திருமணத்தின் போது கேதரின் விரலில் மோதிரம் அணிவித்த வில்லியமும், அவரது மனைவி கேதரினும் இன்பத்திலும், துன்பத்திலும் இனி இணைபிரியாது இருப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு தேவாலய பதிவேட்டில் கையெழுத்திட்டனர். இந்த திருமணத்தையடுத்து கேம்பிரிட்ஜ் கோமகன் ஆகியிருக்கிறார் இளவரசர் வில்லியம். இந்த திருமணத்தையொட்டி லண்டனில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். லண்டன் நகரமே நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த திருமணத்தை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் கண்டு ரசித்தனர். முன்னதாக திருமணத்தின்போது இளவரசர் வில்லியம் ராணுவ கர்னல் போன்று சிவப்பு உடையணிந்து கம்பீரமாக காட்சியளித்தார். கேதரின் பாரம்பரிய வெள்ளை உடையில் புன்னகையுடன் காணப்பட்டார். வில்லியமை கரம்பிடித்ததன் மூலம் தற்போது அவர் மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.