முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணி பார்வார்டு பிளாக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.22 - அ.தி.மு.க. கூட்டணியில் நேற்று பார்வார்டு பிளாக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடைப்பெற்றது.

நடைபெறவுள்ள  2011 தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து அ.தி.மு.க.  பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி பங்கீட்டுக்குழு உறுப்பினர்களான, பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ, தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் எம்.எல்.ஏ ஆகியோர் நேற்று காலை அ.தி.மு.க. தலைமை நிலையத்தில், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், மாநிலப் பொருளாளர் ஆர்.மாயத்தேவர், மாநிலச்செயலாளர் எம்.பசும்பொன், மாநில குழு உறுப்பினர்கள் எஸ்.பி, அல்லிக்கொடி, வி.பாலாஜி ஆகியோருடன் சந்தித்து பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்