முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் தேர்தலில் உருண்ட பெருந்தலைகள்

ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத்,மே.13 - பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மகனும் தோல்வி அடைந்தார். பிரபல கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான இம்ரான்கானும் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தார். 

பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி செய்வதற்காக வரலாற்று சிறப்புமிக்க பொதுத்தேர்தல் கடந்த 11-ம் தேதி நடைபெற்றது. ஓட்டுப்பதிவின்போது பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடித்தனர். இதில் 15-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகளின் இந்த நாசவேலைக்கு பயப்படாமல் அந்த நாட்டு மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் மாலையே முன்வரத்தொடங்கிவிட்டது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்துள்ளது. 

அதேசமயத்தில் இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவியுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ராஜா பெர்வெஸ் ஆஷ்ரப் தோல்வி அடைந்தார். இவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்தவர். முன்னாள் செய்தித்துறை அமைச்சர்கள் உமர் ஜமான் ஹைரா,பீர்தவுஸ் ஆஷிக் அவான், பஞ்சாப் மாகாண பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் மன்சூர் அகமத் வாட்டோ, பொது கணக்கு கமிட்டி தலைவர் நதீம் அப்சல் கோண்டல்,புஷ்ரா ஐய்ஜாஜ், பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாஜர் நாஜர் முகமத் கோண்டல் மற்றும் முக்கிய தலைவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அப்துல் மற்றும் அவரது சகோதரும் தோல்வி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்