எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.15 - ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ரூ.12 கோடியில் ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். விளையாட்டு வீரர்களுக்கு உணவுப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை வருமாறு:-
அறிவாற்றலை வளர்க்கக் கூடிய கல்வி, ஆரோக்கியத்தை பேணிக் காக்கக் கூடிய விளையாட்டு ஆகிய இரண்டும் இளைய சமுதாயத்தின் இரு கண்கள் என்பதால் இவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டை விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே தலை சிறந்த மாநிலமாக உருவாக்கும் வகையில், இதற்கென தனியாக ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கொள்கை, சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே விளையாட்டில் ஈடுபட வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், விளையாட்டிற்கு ஏற்றப்படி அவர்களது உடலை தயார்படுத்தும் முறைகள், மாற்றுத் திறனாளிகள் இடையே விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்துதல், விளையாட்டு அரங்கங்கள் அமைத்தல், பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் பெறுவதற்கு வழிவகை செய்யும் பயிற்சிகள் அளித்தல், அந்த பயிற்சிகளை தருவதற்கு தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் தெரிவு செய்தல், விளையாட்டுகளுக்கு அடிப்படை தேவைகளான தடகள தளங்கள், நீச்சல் குளங்கள் போன்ற பல்வேறு அமைப்புகளை உருவாக்குதல், விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
உடல் ஆரோக்கியம் பேணப்படுவதன் மூலம் நோய் விகிதம் மற்றும் இறப்பு விகிதம் குறையும் என்பதன் அடிப்படையிலும், ஆரோக்கியமான, துடிப்பான வாழ்க்கை பல்வேறு நோய்களை தடுக்கும் கேடயம் என்பதைக் கருத்தில் கொண்டும், அனைத்துத் தரப்பு மக்களும் ஆரோக்கியமான வளமான வாழ்வை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் முதலமைச்சரின் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஊடகத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு மற்றும் பல்வேறு நலச் சங்கங்கள், விளையாட்டு இணையங்கள், சுய உதவிக் குழு அமைப்புக்கள் மற்றும் இதர அமைப்புகளின் ஒத்துழைப்போடு செயல்படுத்தப்படும்.
1993 ஆம் ஆண்டு என்னால் துவக்கி வைக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் புதிய செயற்கை புல் ஓடு தளம், கால் பந்து வளாகம், புதுப்பிக்கப்பட்ட அலுவலகம் ஆகியவற்றுடன் புதிய பொலிவு பெற்று விளங்குகிறது. தற்போது பல்நோக்கு உள் விளையாட்டரங்கம் அருகில் செயற்கை இழை தட கள ஓடு தளம் மற்றும் இயற்கை புல் வெளி கால்பந்து திடல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் விளையாட்டு வீரர்கள் மேலும் பயன் அடைவதற்கு ஏதுவாக ஸ்குவாஷ் அரங்கம், இறகுப் பந்து உள்ளரங்கம், கையுந்துப் பந்து, கூடைப் பந்து ஆடு களங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யேக நீர் சிகிச்சை நீச்சல் குளம் ஆகியவை கொண்ட மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் 12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் வருங்காலத்தில் சர்வதேச அல்லது தேசிய அளவிலான போட்டிகள் இந்த ஒருங்கிணைந்த வளாகத்தில் நடத்த வழிவகை ஏற்படும்.
கடந்த 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு அறிவிப்புகளின்படி முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பத்து விளையாட்டுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிறந்த முறையில் நடத்தி முடிக்கப்பட்டன. தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடையே இந்தப் போட்டிகளின் மீதான தாக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்தப் போட்டிகளை மேலும் வலுப்படுத்தி விளையாட்டுப் போட்டிகளின் தரம் அதிகரிக்கும் வகையில் தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் போன்று, முதலமைச்சர் கோப்பைக்கான மாநில போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். இதில் முதல் மூன்று இடம் வெல்வோர் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய், 75,000 ரூபாய் மற்றும் 50,000 ரூபாய் முறையே ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கென ஆண்டுதோறும் கூடுதலாக 2.57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தும் போது விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, போட்டிகளில் பங்கு பெறும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வசதிக்காக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய இரு இடங்களில் தலா 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன தங்குமிடம் மற்றும் உணவுக் கூட வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் சுமார் 6000 ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அவர்கள் அலுவலக நாட்களில் நீண்ட நேரம் பணிபுரிந்து வருவதுடன், விடுமுறை நாட்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள். தொடர்ந்து பல மணி நேரம் இருக்கையிலேயே அமர்ந்து பணி புரிய வேண்டிய சூழ்நிலையினால் அவர்களது உடல் நலம் பாதிக்கப்படுகிறது. ஊழியர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தால், பணிகளை விரைவாகவும், குறித்த காலத்திலும் முடிக்க இயலும். அவர்களின் பணித் திறன் அதிகரிக்கவும் வழிவகை ஏற்படும். எனவே அரசு ஊழியர்களின் உடல் நலத்தைப் பாதுகாக்க, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனித் தனியே அனைத்து வசதிகளுடன் கூடிய உடற் பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
1995 ஆம் ஆண்டு ஏழாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்ற போது, டென்னிஸ் போட்டிகள் நடத்துவதற்காக நவீன வசதிகளுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் கட்டப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்த நிலையில் பன்னாட்டு அளவிலான போட்டிகள் நடத்த ஏதுவாக இங்குள்ள செயற்கை இழை டென்னிஸ் ஆடு களங்கள், மின்னொளி அமைப்புகள், ஸ்கோர் போர்டு ஆகியவைகளை மாற்றி அமைப்பதுடன் பல்வேறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை உள்ளதால், தொலைக்காட்சி ஒளிபரப்பு வசதி, வீரர்கள் உடை மாற்றும் அறைகள், முக்கிய பிரமுகர்கள் அறை போன்ற பல்வேறு நவீன வசதிகளுடன் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த டென்னிஸ் விளையாட்டரங்கம் புனரமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
10 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட, விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள 25 மாணவர்கள் மற்றும் 25 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விளையாட்டில் உயர் தர நுணுக்கங்களுடன் கூடிய விஞ்ஞான ரீதியான பயிற்சி அளிப்பதற்கென சென்னையில் உலகத் தரம் வாய்ந்த முதன்மை நிலை விளையாட்டு மையம், ஒன்று அமைக்கப்படும் என்றும் அதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியர் தங்கி பயிற்சி பெறுவார்கள் என்றும் ஏற்கெனவே நான் அறிவித்திருந்தேன். இதன்படி சிறுவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலும், சிறுமியர்களுக்கான மையம் நேரு உள் விளையாட்டரங்கிலும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தினை மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்துடன், ஸ்ரீரங்கம், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் விளையாட்டு உபகரணங்கள், நவீன உடற்பயிற்சிக் கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த மையங்களில் பயிற்சி பெறும் மாணவ-மாணவியருக்கு அந்தந்த இடங்களில் உள்ள சிறந்த பள்ளிகளில் கல்வி பயிலவும் அரசு ஆவன செய்யும். இந்த மையங்கள் அமைக்க ஆண்டொன்றுக்கு 90 லட்சம் ரூபாய் தொடரா செலவினமும், 60 லட்சம் ரூபாய் தொடர் செலவினமும் ஏற்படும்.
சர்வதேச விளையாட்டரங்கில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்களின் ஆலோசனைப்படி விஞ்ஞான முறையில் விளையாட்டின் தன்மையின் அடிப்படையில் சத்தான சமச்சீர் உணவு வழங்கப்பட்டு வருவது அவர்களின் வெற்றிக்கு ஒரு மூல காரணம் என்பதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெற்று வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சத்தான சமச்சீர் உணவு வகைகளை நாள்தோறும் வழங்குவதற்கு ஏதுவாக தற்போது வழங்கப்பட்டு வரும் தொகையான 75 ரூபாய், 250 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக, ஆண்டொன்றுக்கு கூடுதலாக 7 கோடியே 84 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிலும் சிறுவர், சிறுமியருக்கு உணவுக்காக நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 150 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மேற்காணும் இடங்களில் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்காக தனித்தனியே சிறப்பு விளையாட்டு விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இவர்களுக்கு உணவுப்படியாக நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மேற்காணும் முதன்மை விளையாட்டு மையம் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப்படி இனிமேல் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 200 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக, ஆண்டொன்றுக்கு கூடுதலாக 57 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.
சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் பயிற்றுநர்களின் பணியினை அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் 8,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காக ஆண்டொன்றுக்கு கூடுதலாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் மாவட்ட விளையாட்டு வளாகங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு 15 முதல் 20 ஆண்டுகள் முடிந்து விட்டப்படியால் அவைகளை சீரமைத்து புதுப்பிக்க வேண்டியது அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, விளையாட்டு அரங்கங்கள் மற்றும் கட்டமைப்புக்களை புதுப்பிக்க மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒரு முறை சிறப்பு மானியமாக 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேசிய மாணவர் படை என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட இந்த தேசிய மாணவர் படைக்கென தனியாக எந்த விதமான பயிற்சி நிலையமும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும்,
இதன் காரணமாக பயிற்சி முகாம்கள் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டும், தேசிய மாணவர் படைக்கென தனியாக பயிற்சி அகாடமி ஒன்று 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் முதன் முதலாக தமிழகத்தில் உடற் கல்வி மற்றும் விளையாட்டிற்கென பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
125 ஏக்கர் பரப்பளவுள்ள மேலக்கோட்டையூர் என்ற இடத்தில் இயங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் உடற் பயிற்சி செய்திட பல்நோக்கு உடற்பயிற்சிக் கூடங்கள் அமையப் பெறவில்லை. இப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவியரின் பாடத் திட்டத்திற்கு ஏற்ப பயிற்சி செய்திட 40 லட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு உடற்பயிற்சிக் கூடம் ஒன்று அமைக்கப்படும் என்பதையும், விளையாட்டுத் திடல் 35 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்காணும் நடவடிக்கைகள், ஆரோக்கியமான தமிழகம் உருவாகவும், தமிழக விளையாட்டு வீரர்களின் திறன் சர்வதேச அளவில் மேம்படவும் வழி வகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
மேற்கண்டவாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
இலங்கை சிறையில் இருந்து 33 தமிழக மீனவர்கள் விடுதலை
27 Mar 2024சென்னை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 33 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவ
-
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024சென்னை, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆம் ஆத்மி
27 Mar 2024புதுடெல்லி, 7 நாட்களாக சிறையில் உள்ள நிலையில் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி தகவல் தெரிவித்துள்ளது.
-
உ.பி. மீரட்டில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி
27 Mar 2024லக்னோ, உ.பி. மீரட்டில் இருந்து தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்குகிறார்.
-
மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைத்தேர்தல் நிறுத்தம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
27 Mar 2024மும்பை, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க கடும் தோல்வியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
27 Mar 2024சென்னை, குறுக்கு வழிகளில் செயல்படும் தி.மு.க பாராளுமன்றத் தேர்தலில் கடும் தோல்வியை சந்திக்கும் என்ற அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
27 Mar 2024சென்னை, பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.