முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு காவல் நீட்டிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 மே 2013      உலகம்
Image Unavailable

 

ராவல்பிண்டி,மே.15 - பெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு வீட்டுக்காவலை வரும் 28-ம் தேதி வரை நீட்டித்து தடா எதிர்ப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தானில் இரண்டு முறை பிரதமராக இருந்த பெனாசீர் பூட்டோ தேர்தல் பிரசாரத்தின்போது படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் பெர்வஸ் முஷாரப் சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நேற்று கோர்ட்டில் நடந்தது. அப்போது முஷாரப் சார்பாக யாரும் ஆஜராகவில்லை. அதனால் வழக்கு விசாரணை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அவருக்கு வீட்டுக்காவலை வரும் 28-ம் தேதி வரை நீட்டிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்