முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேன்ஸ் திரைப்படவிழாவில் துப்பாக்கி சூடு: நடிகர்கள் தப்பினர்

சனிக்கிழமை, 18 மே 2013      சினிமா
Image Unavailable

 

பாரிஸ், மே. 19  - பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நடிகர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 12 நாட்கள் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் மூன்றாம் நாளான நேற்று பிரான்ஸ் நாட்டின் கேனல் பிளஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆஸ்கார் விருது வென்ற ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த கிறிஸ்டோப் வால்ட்ஸ் மற்றும் பிரான்ஸ் நாட்டு நடிகரான டேனியல் ஆடியுயில் ஆகியோரிடம் பேட்டி எடுத்து கொண்டிருந்தது.

நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியான இதனை பார்வையாளர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த போது கூட்டத்தில் ஒருவன் திடீரென எழுந்து வானை நோக்கி இரு முறை துப்பாக்கியால் சுட்டான். இதில் அனைவரும் சிதறி ஓடினர். இதனை தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக தாவி சென்று அவனை மடக்கி பிடித்தனர். பின்னர் அவனை சோதனையிட்ட போது கையில் எறி வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கூட்டத்தினரை உடனடியாக வெளியேறுமாறு பாதுகாவலர்கள் கூறினர். பின்னர் போலீசார் அவனை கைது செய்து அவனிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். வெடிகுண்டு போலியானது என்பதும் தெரிய வந்தது.

இந்த சம்பவத்தில் நடிகர்கள் கிறிஸ்டோப் வால்ட்ஸ் மற்றும் டேனியல் ஆடியுயில் ஆகியோர் காயமின்றி தப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்