Idhayam Matrimony

ராஜ்யசபை தேர்தல் - ஹேமமாலினி மனுதாக்கல்

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      அரசியல்

பெங்களூர்,பிப்.22 - கர்நாடக மாநிலத்தில் இருந்து நடைபெறும் ராஜ்யசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக பிரபல இந்தி நடிகை ஹேமமாலினி நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் பாரதீய ஜனதா வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த தேர்தல் மார்ச் 3 ம் தேதி நடக்கிறது. இவர் மனுத்தாக்கல் செய்த போது கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மாநில பா.ஜ.க. தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோர் உடனிருந்தனர். மாநில சட்டசபையில் தேர்தல் அதிகாரி பாட்டீலிடம் ஹேமமாலினி மனுத்தாக்கல் செய்தார். சட்டசபையில் பா.ஜ.கவுக்கு பலம் இருப்பதால் ஹேமமாலினி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜசேகர மூர்த்தி மறைந்ததை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை ஹேமமாலினி பதவியில் நீடிப்பார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்