எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.- 1 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடப்போவதாக முன்னாள் அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார். இதுவரை இந்தவிஷயத்தில் பகிரங்கமாக வாய் திறக்காத இவர் தற்போது தனது மெளனத்தை கலைத்து விபரங்களை வெளியிடப்போவதாக கூறியிருப்பதால் தி.மு.க. மேலிடம் கலக்கம் அடைந்துள்ளது.நாட்டையே உலுக்கிய இமாலய ஊழலாக கருதப்படுவது ஸ்பெக்ட்ரம் ஊழலாகும். காரணம் இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கொஞ்சம் நஞ்சமல்ல ரூ.1 76 லட்சம் கோடி. சமீபத்தில் பத்திரிகைகளில் கசிந்த பி.ஏ.சி. அறிக்கை மூலம் இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.90 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது. இந்த இழப்பு பற்றி முதலில் மறுத்து வந்த ராசா, தணிக்கைத்துறை அதிகாரி வினோத் ராய் அறிக்கை வெளியிட்ட பிறகு ஒரு வழியாக அதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
எதிர்க்கட்சிகளின் கடுமையான வற்புறுத்தலை அடுத்த ஆ.ராசா கைது செய்யப்பட்டு அவரிடம் 14 நாட்கள் விசாரணை நடந்தது. பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு அடிக்கடி காவல் நீடிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சித்தார்த்த பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் பால்வா ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பிறகு 5 தனியார் நிறுவன அதிகாரிகளும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்கள். இதைத்தொடர்ந்து இந்த நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது. அதாவது கலைஞர் டி.வி.க்கு சினியுக் நிறுவனம் மூலம் ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலமானது. ஆனால் இந்த தொகையை திருப்பிக்கொடுத்துவிட்டதாக கலைஞர் நிர்வாகம் கூறியது. இந்த டி.வி.யில்தான் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கருணாநிதி மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் வெளியானதை அடுத்து தயாளு அம்மாளிடமும் கனிமொழியிடமும் சி.பி.ஐ. அதிரடி விசாரணை நடத்தியது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளார். கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று சி.பி.ஐ. அதில் குற்றம்சாட்டியுள்ளது. கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒவ்வொரு விஷயமாக அம்பலமாகி வரும் நிலையில் சிறையில் இருக்கும் ராசா கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது என்டிடிவிக்கு தனது மெளனத்தை கலைத்து சில கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதுவரை வாய் திறக்காமல் மெளனம் சாதித்த ராசா தற்போது முதல் முறையாக தனது மெளனத்தை கலைத்துள்ளார். உங்கள் மீதான குற்றப்பத்திரிகை பற்றி என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடுவேன் என்று ஒரே வரியில் பதில் அளித்தார் ராசா. இந்த ஊழல் விவகாரத்தில் தி.மு.க. எப்படி கையாண்டது என்று கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் ராசா. கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கலானதும் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மேலிடம் அவசரமாக கூடியது. அப்போது தன் மகள் கனிமொழி பற்றி வானலாவ புகழ்ந்து பேசினாராம் கருணாநிதி. ஆனால் ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கலானபோது அவர் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. எதையும் காட்டிக்கொள்ளவுமில்லை. இந்த நிலையில்தான் இந்த ஊழல் தொடர்பாக அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடப்போவதாக ராசா கோபத்துடன் கூறியிருப்பது தி.மு.க. மேலிடத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை வெளி வராத விபரங்களை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதனால் தி.மு.க. மேலிடம் ஆடிப்போய் உள்ளது.
சிறைச்சாலையில் இருக்கும் ராசா,அங்கு சட்டப்புத்தகங்களை படித்து பொழுதை போக்குகிறார். இவரைப்பற்றி தி.மு.க. மேலிடம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் கனிமொழி விஷயத்தில் மட்டும் கோப கனலை கக்குகிறது தி.மு.க. மேலிடம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.