எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.23 - சென்னை போட்டிக்கு ரூ.360 கோடி பந்தயம் கட்டப்பட்டதாக சூதாட்ட தரகர் பிரசாந்த் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் பல கோடி பணம் புரண்டதும், அடுக்கடுக்காக முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்ட அதே நேரத்தில் சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது சூதாட்ட தரகர்கள் ஹரீஷ் பஜாஜ், வேதாச்சலம், லக்கி, பிரவீண்குமார், தீபக் பஜாஜ், சுனில் பஜன்லால் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வசதி படைத்த பெரும் புள்ளிகளான இவர்கள் சென்னையில் தங்கி தொழில் செய்து வரும் வடமாநிலத்தவர்கள். விசாரணையில் சூதாட்ட தரகர்களை ஒருங்கிணைத்து தலைவராக செயல்பட்டது பிரசாந்த் என தெரிய வந்தது. அயனாவரத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான இவர் போலீஸ் சோதனையில் சிக்காமல் தப்பினார். அவருடன் முக்கிய புள்ளிகள் பலரும் தலைமறைவானார்கள். இவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதை அறிந்த பிரசாந்த் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார். அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி லேப்-டாப், டைரி, செல்போன்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினர்.
போலீசார் அவரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினார்கள். பிரசாந்த் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து அவருக்கும் டெல்லி, ஆமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற இடங்களில் உள்ள சூதாட்ட தரகர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
பிரசாந்தின் கீழ் சென்னையில் மட்டும் சிறிய, நடுத்தர, பெரிய தரகர்கள் என 3 வகைப்பட்டோர் 150-க்கும் மேற்பட்டோர் செயல்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை ஒருங்கிணைத்து பிரசாந்த் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் மூலம்தான் கிரிக்கெட் போட்டிகளுக்கு பெட்டிங் நடத்தி இருக்கிறார்.
அந்த வகையில் ஒவ்வொரு போட்டிக்கும் பல கோடிக்கு பந்தயம் கட்டி இருக்கிறார்கள். எந்தெந்த போட்டிக்கு எவ்வளவு பந்தயப் பணம் கட்டப்பட்டது என்ற முழு விவரங்களையும் பிரசாந்த் வாக்குமூலமாக அளித்துள்ளார்.
சென்னையில் 6-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதிய ஐ.பி.எல். போட்டி தொடக்க ஆட்டத்தில் மட்டும் ரூ. 360 கோடிக்கு பந்தயப் பணம் புரண்டு இருக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி தோற்றதால் பிரசாந்த்துக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்து இருக்கிறது. அதன் பிறகுதான் சூதாட்டம் மேலும் விறுவிறுப்பை எட்டி இருக்கிறது.
முக்கிய புள்ளிகள், அரசியல் பிரமுகர்கள் பலர் பிரசாந்த்துடன் தொடர்பு கொண்டு பந்தயப் பணம் கட்டி இருக்கிறார்கள். தலைமறைவாக உள்ள சூதாட்டத் தரகர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
இவர்களில் வேப்பேரியைச் சேர்ந்த உத்தம் ஜி ஜெயின், கீழ்ப்பாக்கம் சஞ்சய் பாப்னா ஆகியோர் முக்கிய புள்ளிகள் ஆவார்கள். இவர்கள் கோர்ட்டு மூலம் முன் ஜாமீனுக்கு முயற்சி செய்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
நேற்று முன்தினம் இவர்கள் இருவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சோதனைக்குப்பின் அவர்களது வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டன. சரண் அடைந்த சூதாட்ட தரகர் பிரசாந்த் அன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே கைதான 6 தரகர்களில் ஹரிஷ் பஜாஜ், பிரவீண்குமார், லக்கி, வேதாச்சலம் ஆகிய 4 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதன்படி 4 பேரிடமும் 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்து 4 பேரிடமும் நேற்று முன்தினம் முதல் போலீசார் தங்கள் பொறுப்பில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.