எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.- 1 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடப்போவதாக முன்னாள் அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார். இதுவரை இந்தவிஷயத்தில் பகிரங்கமாக வாய் திறக்காத இவர் தற்போது தனது மெளனத்தை கலைத்து விபரங்களை வெளியிடப்போவதாக கூறியிருப்பதால் தி.மு.க. மேலிடம் கலக்கம் அடைந்துள்ளது.நாட்டையே உலுக்கிய இமாலய ஊழலாக கருதப்படுவது ஸ்பெக்ட்ரம் ஊழலாகும். காரணம் இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு கொஞ்சம் நஞ்சமல்ல ரூ.1 76 லட்சம் கோடி. சமீபத்தில் பத்திரிகைகளில் கசிந்த பி.ஏ.சி. அறிக்கை மூலம் இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.90 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது. இந்த இழப்பு பற்றி முதலில் மறுத்து வந்த ராசா, தணிக்கைத்துறை அதிகாரி வினோத் ராய் அறிக்கை வெளியிட்ட பிறகு ஒரு வழியாக அதை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.
எதிர்க்கட்சிகளின் கடுமையான வற்புறுத்தலை அடுத்த ஆ.ராசா கைது செய்யப்பட்டு அவரிடம் 14 நாட்கள் விசாரணை நடந்தது. பின்னர் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு அடிக்கடி காவல் நீடிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சித்தார்த்த பெஹூரா, ஆர்.கே.சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் பால்வா ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பிறகு 5 தனியார் நிறுவன அதிகாரிகளும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்கள். இதைத்தொடர்ந்து இந்த நிறுவனங்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது. அதாவது கலைஞர் டி.வி.க்கு சினியுக் நிறுவனம் மூலம் ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலமானது. ஆனால் இந்த தொகையை திருப்பிக்கொடுத்துவிட்டதாக கலைஞர் நிர்வாகம் கூறியது. இந்த டி.வி.யில்தான் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், கருணாநிதி மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. கலைஞர் டி.வி.க்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் வெளியானதை அடுத்து தயாளு அம்மாளிடமும் கனிமொழியிடமும் சி.பி.ஐ. அதிரடி விசாரணை நடத்தியது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி பெயர் சேர்க்கப்பட்டுள்ளார். கனிமொழி ஒரு கூட்டுச்சதியாளர் என்று சி.பி.ஐ. அதில் குற்றம்சாட்டியுள்ளது. கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒவ்வொரு விஷயமாக அம்பலமாகி வரும் நிலையில் சிறையில் இருக்கும் ராசா கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டார். அப்போது என்டிடிவிக்கு தனது மெளனத்தை கலைத்து சில கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். இதுவரை வாய் திறக்காமல் மெளனம் சாதித்த ராசா தற்போது முதல் முறையாக தனது மெளனத்தை கலைத்துள்ளார். உங்கள் மீதான குற்றப்பத்திரிகை பற்றி என்ன கருத்து சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடுவேன் என்று ஒரே வரியில் பதில் அளித்தார் ராசா. இந்த ஊழல் விவகாரத்தில் தி.மு.க. எப்படி கையாண்டது என்று கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் ராசா. கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கலானதும் ஆத்திரம் அடைந்த தி.மு.க. மேலிடம் அவசரமாக கூடியது. அப்போது தன் மகள் கனிமொழி பற்றி வானலாவ புகழ்ந்து பேசினாராம் கருணாநிதி. ஆனால் ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கலானபோது அவர் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை. எதையும் காட்டிக்கொள்ளவுமில்லை. இந்த நிலையில்தான் இந்த ஊழல் தொடர்பாக அனைத்து விபரங்களையும் பின்னர் வெளியிடப்போவதாக ராசா கோபத்துடன் கூறியிருப்பது தி.மு.க. மேலிடத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இதுவரை வெளி வராத விபரங்களை வெளியிடுவார் என்று தெரிகிறது. இதனால் தி.மு.க. மேலிடம் ஆடிப்போய் உள்ளது.
சிறைச்சாலையில் இருக்கும் ராசா,அங்கு சட்டப்புத்தகங்களை படித்து பொழுதை போக்குகிறார். இவரைப்பற்றி தி.மு.க. மேலிடம் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால் கனிமொழி விஷயத்தில் மட்டும் கோப கனலை கக்குகிறது தி.மு.க. மேலிடம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.