முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்ச்சையில் சிக்கினார் போப் பிரான்சிஸ்

புதன்கிழமை, 22 மே 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

வாட்டிகன், மே. 23 - பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தில் வைத்து போப் பிரான்சிஸ் மாற்றுத்திறனாளி ஒருவரிடம் நடந்து கொண்ட விதத்தால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். வாடிகன் நகரில், கடந்த ஞாயிறன்று நடந்த கூட்டுப் பிரார்த்தனை முடிந்த பிறகு, ஆலயத்தின் வாசலில் காத்திருந்த ஒரு மாற்றுதிறனாளியின் தலையை தொட்டு ஆசி வழங்கினார் போப் பிரான்சிஸ். அது பார்ப்பதற்கு அந்த நபரின் உடலில் இருந்து தீய சக்திகளை வெளியேற்றியது போல் இருந்ததாம்.

இதன் மூலம், போப் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான பேயோட்டும் செயல்களில் ஈடுபடுகிறாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால், சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த மாற்றுதிறனாளியின் தலையை தொட்டு ஆசி வழங்கினார் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்