முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணி மீது ரூ.10 லட்சம் கட்டி தோற்ற மெய்யப்பன்..!

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

மும்பை, மே. 27 - ஐ.பி.எல். போட்டிகளில் மொத்தம் 9 போட்டிகளில் சென்னை அணியின் சி.இ.ஓ. குருநாத் மெய்யப்பன் பந்தயம் கட்டியுள்ளார். அதில் 5 பந்தயங்களில் அவர் தோற்றுள்ளார்.  ஐ.பி.எல். பெட்டிங் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. குருநாத் மெய்யப்பன் மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர் மொத்தம் 9 போட்டிகளில் பந்தயம்  கட்டியது தெரிய வந்துள்ளது. அதில் 5 பந்தயங்களில் தோல்வியும், 4 பந்தயங்களில் வெற்றியும் பெற்றுள்ளாராம். சென்னை அணி விளையாடிய ஒரு போட்டியில் அவர் ரூ. 10 லட்சம் பந்தயம் கட்டி தோற்றதும் தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சூதாட்டம் குறித்து மேலும் பல தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெய்யப்பனுக்கும் சென்னை அணிக்கும் தொடர்பில்லை என்றும், அவர் அணி நிர்வாகத்தின் கவுரவ உறுப்பினர் தான் என்றும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்