முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை லீனாவை மீண்டும் போலீஸ் காவலில் எடுக்க முடிவு

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை. ஜூன்.8 - நடிகை லீனாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மோசடி மன்னன் சுகாஷ் காதலி நடிகை லீனாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். பெங்களூரைச் சேர்ந்த மோசடி மன்னன் சுகாஷ் சந்திரசேகர். அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ.19 கோடி  மோசடி வழக்கிலும், சேலையூரை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்த வழக்கிலும் இவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாஷ் சந்திரசேகரின் காதலியும், மலையாள நடிகையுமான லீனா மரியாபால் டெல்லியில் பிடிபட்டார். பின்னர், சென்னை கொண்டு வரப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அம்பத்தூர் கனரா வங்கி மோசடி வழக்கில் போலீசார் இவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து மறுபடியும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, சேலையூர் சக்கரவர்த்தியிடம் ரூ.75 லட்சம் மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியாபாலை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க  போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக தாம்பரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை அல்லது திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. அப்போது, அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சுகாஷ் சந்திரசேகர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. ஏற்கனவே கனரா வங்கியில் ரூ.19 கோடி மோசடி வழக்கில் போலீஸ் காவலில் நடிகை லீனாவிடம்  விசாரித்த போது  சுகாஷ் குறித்த சில தகவல்கள் பெறப்பட்டது. தற்போது மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் லீனாவிடம் இருந்து சுகாஷ் பற்றி மேலும் சில தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்