முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்டம்: விக்ரம் அகர்வால் நேரில் ஆஜர்

திங்கட்கிழமை, 10 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 11 - சென்னையை சேர்ந்த நட்சத்திர ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வாலுக்கு ஐ.பி.எல். சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதை தொடர்ந்து கடந்த 30-ந்தேதி ஆஜராக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் ஆஜராகவில்லை.  மறுநாள் ஓட்டல் அதிபர் விக்ரம் அகர்வால் மும்பை குற்றப்பரிவு போலீசில் ஆஜரானார். மும்பை போலீசார் விசாரணையை முடித்து விட்டு அவரை திருப்பி அனுப்பிவிட்டனர். இதற்கிடையே விக்ரம் அகர்வால் கிண்டியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் கடந்த 5-ந் தேதி ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், அன்றைய தினம் அவருடைய மனைவி வந்தனா சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, தன்னுடைய கணவர் ஆஜராவதற்கு ஒருவார காலஅவகாசம் கேட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் கடந்த 8-ந் தேதி மீண்டும் சம்மன் அனுப்பினர். 

இந்நிலையில், நேற்று காலை விக்ரம் அகர்வால் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்