முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ: 4 பெண்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

கோவில்பட்டி, ஜூன் - 12 - துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளம் கிராமத்தில் திலகரத்தினா என்ற தனியார் இயந்திர தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது. நேற்று தீப்பெட்டி தீக்குச்சிகளை கண்டெய்னர் வாகனத்தில் இருந்து வேனில் இறக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக் தீப்பெட்டி தீக்குச்சிகள் உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு லாரி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் வடக்குதிட்டங்குளத்தை சேர்ந்த ராமையா மனைவி சுப்புலெட்சுமி(54), அதே ஊரைசேர்ந்த மாரியப்பன் மகள் உமா(18), கோவில்பட்டி வவுசி நகரை சேர்ந்த சிவா மனைவி சுகந்தி(23), உருளைகுடி கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் மனைவி பானுமதி ஆகியோர் சம்பவ இடத்தில் தீப்பிடித்து எரிந்தனர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி. துரை மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.  பாதிக்கபட்ட பெண்களில் உமா 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்று நர்சிங்கோர்ஸ் எடுத்திருந்தார். கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர்ராஜீ, இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்