முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அருகே பஸ்-கார் மோதல் - 5 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      தமிழகம்
Image Unavailable

 

திருவண்ணாமலை, ஜுன் 12:   திருவண்ணாமலை அருகே தனியார் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் டிரைவர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். திருவண்ணாமலை கீழ்நாத்தூரில் வசித்து வருபவர் கலியபெருமாள் (55).புல்டோசர் டிரைவர். இவரது மனைவி செல்வி (52). இவர்களது மகன் ரவி (38) கார் டிரைவர், இவரது மனைவி மஞ்சு 27).  மகன்கள் சூர்யா (4) . ஆர்யா (3) 

இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை அடுத்த இசுக்கழிக்காட்டேரி என்ற கிராமமாகும்.இந்த கிராமத்தில் உள்ள கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. செவ்வாய்கிழமையான நேற்று குல தெய்வ வழிபாட்டிற்காக அந்த கோவிலுக்கு செல்வதென ரவியும் அவரது குடும்பத்தினரும் முடிவு எடுத்தனர்.

அதன்படி நேற்று விடியற் காலை 5.45 மணியளவில் காரில் புறப்பட்டனர்.ரவி காரை ஓட்டினார். ஏந்தல் அருகே சென்ற போது காரும் எதிரே  விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த தனியார் பஸ்சும்  நேருக்குநேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

சம்பவ இடத்திலேயே ரவியின் தந்தை  கலியபெருமாள், மனைவி மஞ்சு, மகன்கள் சூர்யா மற்றும் ஆர்யா ஆகிய  நான்கு பேரும் உயரிழந்தனர். ரவியும் அவரது தாயார் செல்வியும்  படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை  பலனின்றி செல்வி உயிரிழந்தார். ரவியின் நிலை மோசமாகவே அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 இந்த விபத்து குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார்  வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார்.ஒரே குடும்பத்தை சார்ந்த 5- பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்