எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.14 - தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கான மூன்றாம் நிலைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூலை-2 அன்று நடைபெறும் என்றும் வாக்குப்பதிவு ஜூலை.8-ந்தேதியன்று நடைபெறும் என்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் மோகன் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
மூன்றாம் நிலைத் தேர்தல்:
தமிழகத்தில் முதல் நிலையில் 22,212 கூட்டுறவுச் சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் நிலையில் 191 சங்கங்களுக்கு ஒரே, கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இரண்டாம் நிலையில் தேர்தல் நடைபெற்ற சங்கங்களில் தலைவர் / துணைத்தலைவர் தேர்தலும் முடிவுற்று தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் / துணைத்தலைவர்கள் 11.6.2013 அன்று பதவி ஏற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்றாம் நிலையில் 81 கூட்டுறவுச் சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள சங்கங்கள்:
மூன்றாம் நிலையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில்
உள்ள தமிழ்நாடு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகளின் இணையம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் உள்ளிட்ட 59 சங்கங்களுக்கும், பால் வளத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் (ஆவின்), மீன்வளத்துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம், கைத்தறித் துறை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ்வரும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்), தமிழ்நாடு கூட்டுறவு நுாற்பாலைகளின் இணையம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநுால் பதனிடும் நுாற்பாலை ்ரோடு, தமிழ்நாடு பனைவெல்ல வளர்ச்சி வாரியத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் கயிறு விற்பனை கூட்டுறவு இணையம், தொழில் ஆணையர் மற்றும் தொழில்வணிகத்துறை இயக்குநரின் கீழ்வரும் தமிழ்நாடு மாநில கயிறு விற்பனை கூட்டுறவு இணையம், தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் தொழில் கூட்டுறவு விற்பனை இணையம், தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு ரப்பர் பால் கலந்த கயிறு பொருட்கள் சங்கம், வேளாண்மைத் துறை இயக்குநரின் கட்டுப்பாட்டில் உள்ள 10 வேளாண் பொறியியல் மற்றும் சேவை கூட்டுறவு சங்கங்கள், சர்க்கரைத் துறை இயக்குநரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை இணையம், பட்டுப்பூச்சி வளர்ப்புத் துறை இயக்குநரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர்கள் இணையம், (டான்சில்க்) வீட்டுவசதி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி இணையம் உள்ளிட்ட மொத்தம் 81 சங்கங்களுக்கு மூன்றாம் நிலையில் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் திட்டம்:
மேற்குறிப்பிட்ட 81 கூட்டுறவுச் சங்கங்களுக்கான வாக்காளர் பட்டியல் 25.06.2013 அன்று வெளியிடப்படுகிறது. இந்த வாக்காளர் பட்டியலுக்கான மறுப்பு ஏதும் இருப்பின் அதனை 27.6.2013-க்குள் தெரிவிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 29.6.2013 அன்று வெளியிடப்படும்.
வேட்பு மனு தாக்கல்:
வேட்பு மனுத்தாக்கல் 2.7.2013 காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும். அன்றே வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்று மாலை 6.00 மணிக்கு தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுவை திரும்பப் பெற விரும்புவோர் மறு நாள் 3.7.2013 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை 5.00 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.
வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கையும்:
போட்டியுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் 8.7.2013 அன்று காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 10.7.2013 அன்று காலை 10.00 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
தலைவர் / துணைத்தலைவர் தேர்தல்:
மூன்றாம் நிலையில் தேர்தல் நடைபெறும் 81 கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் / துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 15.7.2013 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.
இடஒதுக்கீடு:
ஏற்கெனவே முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டது போலவே இந்த மூன்றாவது நிலைத் தேர்தலிலும் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகக் குழு உறுப்பினர் இடங்களில் 18 ெஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும், 30 ெபெண்களுக்கும் இடஒதுக்கீடு செய்யப்படும். இதர இடங்கள்பொதுப்பிரிவினரிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும்.
நான்காவது நிலைத் தேர்தல்:
மூன்றாவது கட்டத் தேர்தல் முடிவடைந்ததும் நான்காவது கட்டத்தேர்தலுக்கான திட்டமும், தேர்தல் அட்டவணையும் வெளியிடப்படும்.
மேற்கண்டவாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் மோகன், (ஓய்வு) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
13தஅங23அ
வதேராவின் நில பேர ஊழல்: விளக்க ஆவணம் தர பிரதமர் அலுவலகம் மறுப்பு
புது டெல்லி, ஜூன். 14 - காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா, நிலபேர ஊழல் தொடர்பான வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த ஆவணங்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தர பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா விவசாயிகளிடம் இருந்து மிக குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று கூடுதல் விலைக்கு டி.எல்.எப். நிறுவனத்துக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இந்த சர்ச்சைக்குரிய நில பேரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, நுதன் தாக்குர் என்ற தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளையில் ரிட்மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இக் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து, நுதன் தாக்குரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம் தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தொடர்பான ஆவணங்களை கோரி நுதன் தாக்குர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், மனுதாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆவணங்களை தர முடியாது என்று பிரதமர் அலுவலகம் கூறிவிட்டது. மேலும் இந்த விவகாரம் ரகசியமானது என கருதுகிறோம். இதுபோன்ற ரகசியங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட் விலக்கும் அளித்திருக்கிறது என்றும் பிரதமர் அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.