முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு விபத்துகள் பலி: 10 பேர் குடும்பங்களுக்கு நிதிஉதவி

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜூன்.14 - நீரில் மூழ்கி பலியான சிறுவன் சிறுமி மற்றும் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 10 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்தம் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் சீதம் ரூ.10 லட்சம் நிதி உதவியை அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், செய்களத்தூர், பனிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த திரு. செல்லப்பாண்டி என்பவரின் மகன் சிறுவன் வீரபாண்டி என்பவரின் மகள் சிறுமி  ஆனந்தவள்ளி ஆகிய இருவரும் 22.5.2013 அன்று ஆதனூர் கிராமம், ஆதனூர் தடுப்பணை அருகே  தோண்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய பள்ளத்தில்  குளித்துக் கொண்டிருந்த போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; 

காஞ்சிபுரம் மாவட்டம், கோட்டைக்காடு கிராமம், கிழக்கு கடற்கரைச்  சாலை அருகே  25.5.2013 அன்று  இரு சக்கர வாகனம் மீது  தீயணைப்பு வாகனம் மோதியதில், சென்னை  ராயபுரத்தைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்

கன்னியாகுமரி மாவட்டம்,  நாகர்கோவில், வெட்டூர்மணிமடம் அருகே 26.5.2013 அன்று ஜீப் மீது அரசுப் பேருந்து மோதியதில்,  ஜீப்பை ஓட்டிச் சென்ற அகஸ்தீஸ்வரம் வட்டம், நீண்டகரை  கிராமத்தைச் சேர்ந்த குருசு முத்து என்பவரின் மகன் ஆண்டனி அனீஸ் சம்பவ இடத்திலும்,   ஜீப்பில்  பயணம்  செய்த கல்குளம் வட்டம், கோதநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் என்பவரின் மகன்  சஜு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 1.6.2013 அன்றும்  உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; 

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திம்மராயசமுத்திரம் கிராமம் அருகே 27.5.2013 அன்று சமயபுரம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மாம்பழச் சாலை சிக்னல் அருகே  நிலைதடுமாறி இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த என்பவர் சம்பவ இடத்திலும், சிக்னல் அருகே நின்று கொண்டிருந்த என்பவர்  பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; 

கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், செறுகோல் சாலை அருகே  28.5.2013 அன்று இரு சக்கர வாகனத்தின்   மீது அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்க வாகனத்தில் பயணம் செய்த ஆற்றூர் கிராமம், மணிமந்திரத்துவிளை கல்லுபாலத்தைச் சேர்ந்த ரோஸ்மேரி என்பவர் சம்பவ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் வட்டம், முடிச்சூர் ரோடு, கிருழணா நகர் அருகே 28.5.2013 அன்று  இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த  முடிச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் வின்சென்ட் பால் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்; 

நாமக்கல் மாவட்டம், ராஜாகவுண்டன்பாளையம், திருச்செங்கோடு - ்ரோடு  சாலையில் 31.5.2013 அன்று கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் காரில் பயணம் செய்த திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மேல்பாய்ச்சார் கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் விக்னேஷ் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 1.6.2013 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியையும்   அறிந்து  நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன் திருமுருகன் மற்றும் சிறுமி ஆனந்தவள்ளி; சாலை விபத்துகளில் அகால மரணமடைந்த முகமது ஆசிப்,  ஆண்டனி அனீஸ், சஜு, வாசுதேவன், சண்முகம், ரோஸ்மேரி, ஜோசப் வின்சென்ட் பால் மற்றும் விக்னேஷ் ஆகியோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த விபத்துகளில் உயிரிழந்த சிறுவன் திருமுருகன், சிறுமி ஆனந்தவள்ளி,  முகமது ஆசிப், ஆண்டனி அனீஸ், சஜு, வாசுதேவன், சண்முகம், ரோஸ்மேரி, ஜோசப் வின்சென்ட் பால் மற்றும் விக்னேஷ்  ஆகியோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் பொய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  

இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago