முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாகிகள் மறைவிற்கு ஜெயலலிதா இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 3 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே. 3 - அ.தி.மு.க. நிர்வாகிகள் மறைவிற்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள  இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:- வடசென்னை மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதி, பொதுக்குழு உறுப்பினர் கொ.அ.ஜார்ஜ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றிய ஜெ.ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் வி.அர்ச்சுனன், மதுரை புறநகர் மாவட்டம், மேலூர் ஒன்றியம், நாயத்தாம்பட்டி கிளைச்செயலாளர் எம்.மணி ஆகியோர் மரணமடைதுவிட்டனர் என்ற செய்தி கேட்டும், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மீசைகண்டாபுரம் ஊராட்சிச்செயலாளர் பி.ஜலந்தர் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்புச்சகோதரர்கள் ஜார்ஜ், அர்ச்சுனன், மணி மற்றும் ஜலந்தர் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்