முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டியில் இருந்து திரும்புகிறார் தில்ஷான்

புதன்கிழமை, 4 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

கொழும்பு,மே.4 - ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் தில்ஷான் வரும் 11 ம் தேதி நாடு திரும்புகிறார். இலங்கை அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார். இதனால் பெங்களூர் அணிக்காக கடைசி 4 லீக் ஆட்டங்களிலும் அடுத்த சுற்று ஆட்டங்களிலும் அவர் கலந்து கொள்ள மாட்டார். 

தில்ஷான் இலங்கை அணிக்கு திரும்பும் தகவலை அந்நாட்டு கிரிக்கெட் வாரிய செயலர் நிஷாந்தா ரணதுங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிசிசிஐயுடன் பேசி முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள தில்ஷான் 120 ரன்களை எடுத்துள்ளார். ஐ.பி.எல்.லில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்களில் 5 பேர் பாதியிலேயே திரும்புகின்றனர். ஏப்ரல் 8 ம் தேதி தொடங்கிய ஐ.பி.எல். போட்டிகள் வரும் 28 ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்