முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கபாலு-குலாம்நபி ஆசாத்தை மாற்றாவிட்டால் போராட்டம்

புதன்கிழமை, 4 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.4 - தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தமிழக பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் ஆகியோரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 16ம் தேதி சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்' என, காங்கிரஸ் சீரமைப்புக் குழு அறிவித்துள்ளது.

அக்குழுவின் அமைப்பாளர் ஜி.ஏ.வடிவேலு, ஒருங்கிணைப்பாளர்கள் இதயத்துல்லா, ஜோதி ராமலிங்கம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் நடந்த குளறுபடியால் தமிழக காங்கிரஸ் பலவீனம் அடைந்துள்ளது. வேட்பாளர் தேர்வு குளறுபடிக்கு காரணமான தங்கபாலுவை மாநில தலைவர் பதவியில் இருந்தும், குலாம்நபி ஆசாத்தை தமிழக பொறுப்பாளர் பதவியில் இருந்து க்க வேண்டும் என சோனியா, ராகுலை சந்தித்து வலியுறுத்த முடிவு செய்துள்ளோம்.

புது தலைவரை நியமிக்கும் வரை, தமிழக காங்கிரஸ் பணிகளை கவனிக்க குழு ஒன்றை நியமிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் நடக்கவில்லை என்றால், வரும் 16ம் தேதி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களை திரட்டி, சத்தியமூர்த்தி பவனில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்