முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷில்பா ஷெட்டி - குந்த்ரா சூதாட்டத்தில் ஈடுபடவில்லை

ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 1 - ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கீத் ஆகியோர் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ்குந்த்ராவுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருந்ததாக வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டெல்லி போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி பாஸ்போர்ட்டை முடக்கினர். ராஜ்குந்த்ரா பெட்டிங்கில் ஈடுபட்டு ரூ. ஒரு கோடி வரை இழந்ததாக கூறியதை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் குந்த்ராவும் நேர்மையானவர்கள். எந்த தவறும் செய்யவில்லை என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் இருவரும் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர். இது குறித்து ஷில்பா ஷெட்டிக்கும், ராஜ்குந்த்ராவுக்கும் சூதாட்டத்தில் தொடர்பு இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று ஜெய்ப்பூர் போலீஸ் கமிஷனருக்கு டெல்லி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்