எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அயோத்தி,மே.4 - ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருப்பதாலும், இன்டர்போல் அமைப்பு எச்சரிக்கை விடுத்திருப்பதாலும் அயோத்தி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை தாக்கி கிட்டத்தட்ட 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாவதற்கு காரணமான சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனை ஒழித்துக் கட்டியே தீருவது என்று அமெரிக்கா கங்கணம் கட்டி அவனை தேடி வந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் கனவு தற்போது நனவாகி இருக்கிறது.
பாகிஸ்தானில் சொகுசு பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதி பின்லேடனை அமெரிக்க படையினர் நேற்று முன்தினம் ஹெலிகாப்டர் மூலம் குண்டுமழை பொழிந்தும், கடும் சண்டை மூலம் துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர். அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பின்லேடன் கதை நேற்று முன்தினத்தோடு ஒரு முடிவுக்கு வந்தது. அவனது உடலை இறுதி சடங்குகளுக்கு பிறகு அதிக எடையுள்ள பெட்டியில் வைத்து கடலுக்கு அடியில் புதைத்து விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அவனுக்கு யாரும் நினைவிடம் வைத்து வழிபட்டு விடக் கூடாது என்பதற்காக பின்லேடனின் உடல் கடலில் புதைக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.
ஆனால் எந்த இடத்தில் பின்லேடன் உடல் புதைக்கப்பட்டது என்பதை அமெரிக்கா தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் பின்லேடன் கொல்லப்பட்டதால் தலிபான் தீவிரவாதிகள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியை கொல்லப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்காவை தாக்குவோம் என்றும் அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து உலகின் பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட கூடும் என்று இன்டர்போல் அமைப்பு எச்சரித்துள்ளது.
இதையடுத்து இந்தியாவின்பல இடங்களில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, உ.பி. மாநிலம் அயோத்தியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காரணம், அயோத்தி ஒரு பதட்டமான இடம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இங்கு எப்போதுமே பெரும்பாலும் பதட்டம் தான் நிலவுகிறது. தற்போது பின்லேடன் கொல்லப்பட்ட நிலையில் பதட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதையடுத்து அங்கு போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனை தீவிரமாக நடைபெறுகிறது. வெடிகுண்டுகளை செயலிழக்கும் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்கள் துணையுடன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனசோதனையால் மக்களுக்கு இடர்பாடு ஏற்பட்டாலும் கூட அது நன்மைக்கே என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால் அவர்களும் ஒத்துழைப்பு தருகிறார்கள். பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் அமெரிக்க தூதரகமும், பெஷாவர், கராச்சி, லாகூர் போன்ற இடங்களில் அமெரிக்க துணை தூதரகங்களும் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை மக்கள் செல்லக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பின்லேடன் பாகிஸ்தானில் இருந்தது தங்களுக்கு தெரியவே தெரியாது என்கிறார் அந்நாட்டின் அதிபர் ஜர்தாரி. ஆனால் இதை அமெரிக்கா நம்பத் தயாராக இல்லை. பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. பாகிஸ்தான் ஆதரவு இல்லாமல் அவன் எப்படி அங்கு தங்க முடியும் என்று அமெரிக்கா கேள்வி எழுப்பியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு